Wonderful Shopping@Amazon

Saturday 29 August 2020

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-95

இந்தியா கால்பந்து அணி பங்கேற்ற பிஃபா உலகக்கோப்பை  

பிஃபா உலகக் கோப்பையில் தங்களுக்குப் பிடித்த அணியை ஆதரிப்பதற்காக பெர்லின் முதல் சென்னை வரை உள்ள கால்பந்து ரசிகர்கள், அணி வண்ணங்களின் ஜெர்சிகளை அணிந்துகொள்வது கொள்வது வழக்கம். இந்தியாவிலும் கணிசமான கால்பந்து ரசிகர்கள் உள்ளனர்.

சிலர் பிரேசிலை ஆதரிக்கிறார்கள், சிலரோ ரொனால்டோ, ரிவால்டோ, ரொனால்டினோ, லியோ மெஸ்ஸி அல்லது கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோரை ஆராதிக்கிறார்கள், மற்றவர்கள் இந்த அழகான விளையாட்டை ரசிக்கிறார்கள்.

இந்திய ரசிகர்களின் நீண்ட நாள் கனவு - இந்தியா ஃபிஃபா உலகக் கோப்பையில்
பங்கு பெறவேண்டுமென்பதே.

உங்களுக்குத் தெரியுமா ?

1950-ல் அந்தக் கனவு கிட்டத்தட்ட நிறைவேறியது. அந்த ஆண்டில், பிரேசிலில் நடக்கவிருந்த நான்காவது ஃபிஃபா உலகக் கோப்பைக்கு இந்தியா தகுதி பெற்றது. 

பிறகு, என்ன நடந்தது? வாருங்கள் பார்ப்போம்....

இந்தியக் கால்பந்து அணி தரவரிசை 1957-இல் ஃபிஃபா உலகத் தரவரிசையில் 9வது இடத்திலிருந்தது.

ஆனால் இந்திய அணி தரையில் கால் வைக்கவில்லை, ஏன் என்பதற்குப் பல்வேறு கட்டுக்கதைகள் நிலவுகிறது . அதில் ஒன்று, அணி வெறுங்காலுடன் விளையாட அனுமதிக்கப்படவில்லை என்று கூறுவது, உண்மையல்ல.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு நடக்கும் முதல் உலகக் கோப்பை போட்டி.
பல நாடுகள் உலகப் போரால் பாதிக்கப்பட்டிருந்தது மற்றும் சர்வதேச தடைகள் காரணமாக ஸ்காட்லாந்து, பிரான்ஸ் மற்றும் செக்கோஸ்லோவாக்கியா ஆகிய அணிகள் விலகின. இதன் மூலம் பங்கேற்கும் மொத்த அணிகளின் எண்ணிக்கையை வெறும் 13 ஆகக் குறைத்தது.

இந்தப் போட்டியில் ஆசியாவிலிருந்து எந்த அணியும் பங்கேற்கவில்லை. ஆதலால் பிரேசிலின் கால்பந்து கூட்டமைப்பு, அகில இந்தியக் கால்பந்து சம்மேளனத்துடன் தொடர்பு கொண்டு உலகக் கோப்பையில் பங்கேற்க தங்கள் அணியை அனுப்புமாறு கேட்டுக் கொண்டது. உலகக் கோப்பையின் போது இந்தியாவின் செலவுகளை கவனித்துக்கொள்ளப் பிரேசில் அதிகாரிகள் முன்வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தியா உறுதிப்படுத்தவுமில்லை அல்லது பின்வாங்கவுமில்லை, ஆனால், நிகழ்வு தொடங்கியபோது, இந்தியாவின் அணி அங்கு இல்லை.

என்ன நடந்தது? அவர்கள் ஏன் பங்கேற்கவில்லை ?

இந்தியா அணியின் சிறந்த தடுப்பாளர் என்று கருதப்பட்ட சைலன் மன்னாவின் கூற்றுப்படி, உண்மையான காரணம் என்னவென்றால், பயணச் செலவுகள், போதிய பயிற்சி நேரம் இல்லாதது, அந்நிய செலாவணி இருப்புப் பிரச்சினை மற்றும் பிரேசிலுக்கு நீண்டதூர அச்சுறுத்தும் கப்பல் பயணம் போன்றவை, பிரேசிலுக்குப் பயணம் செய்ய வேண்டாம் என்று முடிவை மறைக்க, வெறுங்காலுடன் விளையாட அனுமதி இல்லை என்று சாக்குப்போக்கு AIFF-ஆல் பயன்படுத்தப்படுதப்பட்டது என்று கூறினார். மேலும், ஃபிஃபா உலகக் கோப்பையை ஒலிம்பிக்கைப் போல இந்தியக் கால்பந்து சம்மேளனம் அவ்வளவு தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை.

காரணம் என்னவாக இருந்தாலும், அது 70 ஆண்டுகள் ஆகிவிட்டன, மற்றொரு உலகக் கோப்பைக்கு இந்தியா தகுதி பெறும் நாள் வெகு தொலைவிலில்லை. சமீப காலங்களில், இந்தியாவில் கால்பந்து மோகம் அதிகரித்து வருகிறது. ஐஎஸ்எல் லீக் போட்டிகள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது.

நிச்சயமாக ரசிகர்களின் ஆதரவு, உள்கட்டமைப்பு வசதி, மற்றும் அரசின் ஆசியுடன், இந்தியா ஒரு நாள், உலகக் கோப்பையில் பங்கேற்கும். அதுவரை இந்தியர்கள் தங்கள் கால்பந்து தாகத்தைத் தணிக்க, ஜெர்மன், பிரேசில் மற்றும் அர்ஜென்டினா ஜெர்சிகளை அணிவதில் திருப்தியடைய வேண்டும்.

கொசுறு :

1948-இல் நடந்த ஒலிம்பிக்கில், இந்தியா அணியின் தொடக்கம் ரசிகர்களைக் கவர்ந்தது.  இன்னும் ஆச்சரியம் என்னவென்றால், பெரும்பாலான வீரர்கள் வெறுங்காலுடன் விளையாடியது தான், சிலர் சாக்ஸ் அணிந்தனர். வளர்ந்து வரும் நாடான நம்மை பொறுத்தவரை, சுதந்திரத்திற்குப் பிறகு நடந்த இந்த முதல் சர்வதேச போட்டி ஒரு பெரிய விஷயமாகும்!

நன்றி:Google & 'Thebetterindia.com'

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.


தமிழில் : காளிகபாலி   


No comments:

Post a Comment