Wonderful Shopping@Amazon

Monday 31 August 2020

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-98

இந்தியக் கால்பந்து அணியின் முதல் கேப்டன்

Talimeren Ao - Wikipedia

நாகாலாந்து மாநிலத்தைச் சேர்ந்த, டே ஓ என்று அன்பாக அழைக்கப்படும் டாக்டர் தாலிமரன் ஓவோ இந்தியக் கால்பந்து அணியின் முதல் கேப்டனாக இருந்தார்.  இந்தியாவின் கால்பந்து வரலாற்றில் டாக்டர் டே ஓ அவர்களுக்கு ஓர் சிறப்பிடம் உண்டு.

1918-ஆம் ஆண்டில் அஸ்ஸாமின் நாகா ஹில்ஸ் மாவட்டத்தில் உள்ள  கிராமமான சாங்கியில் பிறந்தார். டாக்டர் ஓவின் தந்தை திரு சுபோங்வதி நிங்டாங்ரி நாகா மலைகளில் முதல் பழங்குடி இன தலைவர் ஆவார். 

தந்தை இறந்த பின், 1933-ஆம் ஆண்டில், டே ஓ, ஜோர்ஹாட் மிஷன் பள்ளிக்கு அனுப்பப்பட்டார், அங்கு தான் அவருக்கு கால்பந்து விளையாட்டின் மீது நாட்டம் ஏற்பட்டது.  அவரது திறமைகள் சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களால் கவனிக்கப்பட்டன.

ஜோர்ஹாட்டிலிருந்து, டே ஓ 1937-இல் காட்டன் கல்லூரியில் சேர குவஹாத்திக்குச் சென்றார். இங்கு அவரது விளையாட்டு மேம்பட்டது. இந்த நேரத்தில், அசாமின் மிகப்பெரிய கால்பந்து கிளப்பான மஹாராணா கிளப்பைச் சேர்ந்த வீரர்கள், காட்டன் கல்லூரிக்கு அருகிலுள்ள ஒரு மைதானத்தில் பயிற்சி பெற்றபோது அவர்களின் அறிமுகம் கிடைத்தது. அப்புறமென்ன தலைவருக்கு ஏறுமுகம் தான்.

மஹாராணாவில் இருந்த காலத்தில், டே ஓ அற்புதமான கால்பந்து திறன்களையும் பாராட்டத்தக்க விளையாட்டுத் திறனையும் வெளிப்படுத்தினார். அவர் தனது விளையாட்டை மேம்படுத்திக் கொண்டே இருந்தார், ஆனால் அவரது தந்தையின் கடைசி விருப்பம் (மருத்துவம் படிக்கவேண்டும்) அவரது மனதில் உறுதியாக இருந்தன. அவர் 1942-ஆம் ஆண்டில், கொல்கத்தாவில் உள்ள கார்மைக்கேல் மருத்துவக் கல்லூரியில் மருத்துவ பட்ட படிப்பில் சேர்ந்தார்.

கொல்கத்தாவில், மஹாரானா கிளப்பைச் சேர்ந்த டே ஓவின் பழைய நண்பர், அப்போது மோகன் பகானுக்காக விளையாடிக் கொண்டிருந்த சரத் தாஸ், அவரை கிளப்பின் அணிக்கு அழைத்து வந்து தடுப்பாளராக சேர்க்கப்பட்டார்.  1943 முதல் 1952 வரை மோகன் பகானில் ஒன்பது சீசன்களில் மிட்பீல்டர் மற்றும் தடுப்பாளராக ஆதிக்கம் செலுத்தியபடி இருந்தார். 

அவருடைய அற்புதமான விளையாட்டு திறன் மற்றும் அணியை வழிநடத்திச் செல்லலும் பாங்கு மோகன் பகான் அணியின் கேப்டன் பதவிக்கு அழைத்துச் சென்றது. அதைத் தொடர்ந்து, இந்தியத் தேசிய அணிக்கு கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த காலகட்டத்தில், அவர் 1948 லண்டன் ஒலிம்பிக்கிற்கு இந்திய அணியை வழிநடத்தினார், இது இரண்டாம் உலகப் போர் காரணமாக 14 வருட இடைவெளிக்குப் பின்னர் நடைபெற்றது.

1948 லண்டன் விளையாட்டுப் போட்டிகளில் இந்திய ஒலிம்பிக் அணியின் கொடியை ஏந்தியவர்.  

லண்டன் ஒலிம்பிக்கில் டே ஓ தலைமையிலான அணி  பிரான்ஸை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி முன்னேறியது. அவருடன் சைலன் மன்னா மற்றும் தாஜ் முகமது போன்ற போன்றோர்களும் விளையாடினர்.

ஒலிம்பிக்கைத் தொடர்ந்து, இங்கிலாந்தில் உள்ள புகழ் பெற்ற கால்பந்து கிளப் 'அர்செனல்' அவரை ஒப்பந்தம் செய்ய முன்வந்தது, ஆனால் அவர் இந்தியாவுக்காக விளையாட முடிவு செய்தார்.

அவர் பட்டம் பெற்ற சில ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் விளையாட்டை விட்டு வெளியேறி, அசாமின் திப்ருகார் மருத்துவக் கல்லூரியில் ENT துறையில் சேர்ந்தார். அவர் 1953-இல் நாகாலாந்துக்குத் திரும்பினார், பின்பு படிப்படியாக உயர்ந்து 1978-இல் நாகாலாந்தில் சுகாதார சேவைகள் இயக்குநராக ஓய்வு பெற்றார்.


நன்றி:Google & 'Thebetterindia.com'

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.


தமிழில் : காளிகபாலி    


1 comment:

  1. Good to know about such a legendary football player.
    again I would like to thank for our authorsuch a wonderful blog to know about such a great player.

    ReplyDelete