Wonderful Shopping@Amazon

Tuesday 18 August 2020

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-88

புது நெல்லு புது நாத்து(1991)

கேள்வி-பதில் பாடல்கள் பற்றி உங்களுக்குத் தெரியுமா? இருவர் பாடுவது. ஒருவர் கேள்வியைத் தொடுப்பது மற்றொருவர் பதிலளிப்பது எனப் பேச்சு வழக்கிலோ அல்லது கவிதை நடையிலோ இருக்கும். எனக்குத் தெரிந்த கேள்வி-பதில் பட்டியல் கீழே, வேறு எதாவது பாடல் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும் :

"சீர்மேவும் குருபதம்.." (சக்ரவர்த்தி திருமகள்)
"என் கேள்விக்கென்ன பதில்.." (உயர்ந்த மனிதன்)
கேள்வியையே பாடலாக "கொடியசைந்ததும் காற்று வந்ததா?" 
                                                            (பார்த்தால் பசி தீரும்)
"புன்னகை மன்னன் பூவிழி கண்ணன் .."  (இரு கோடுகள்)
"இதோ இதோ என் நெஞ்சினிலே.. " (வட்டத்துக்குள் சதுரம்)
"என்னம்மா கண்ணு" (மிஸ்டர் பரத்)
"எடுத்து நான் விடவா" (புது புது அர்த்தங்கள்)

சரி விசயத்துக்குப் வருவோம், 'புது நெல்லு புது நாத்து' - என்ன ஒரு அழகான தலைப்பு, இயக்குநர் இமயம் பாரதிராஜா இயக்கிய இப்படத்தில் ராஜாவின் இசையில் வந்த எல்லாப் பாடல்களும் பிரபலமானவை தான். ஆனால் இரண்டு பெண்கள் தங்கள் ரகசியங்களை / ஏக்கங்களைக் கேள்வி-பதில் மூலம் பகிர்ந்துகொள்ளும், கவிஞர் முத்துலிங்கம் இயற்றிய இப்பாடலை, எம் எஸ் சித்ரா மற்றும் உமா ரமணன் அவர்கள் பாடிய "ஏ மரிக்கொழுந்து என்னம்மா கிருஷ்ணவேணி .." என்ற பாடல் எனக்குப் பிடிக்கும். காரணம் எதுவும் இல்லை அல்லது சொல்லத் தெரியவில்லை என்று வைத்துக்கொள்ளலாம். சென்னை மற்றும் இலங்கை வானொலியில் அடிக்கடி கேட்ட பாடல்.

"புது நெல்லு புது நாத்து பொங்கலுக்கு காத்திருக்கு .. 
புது பொண்ணு இது ரெண்டும் மாமன் சொல்லுக்கு காத்திருக்கு"..

- என்ற மனதை வருடும் வரிகள் மற்றும் இனிய இசை உயிரையே உருக்குகிறது. நீங்களும் அந்த பாடலை கேளுங்கள் :




நன்றி:Youtube
 
 
குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.


- காளிகபாலி  



No comments:

Post a Comment