உயிரே உனக்காக (1986)
இயக்குநர்க் கே ரங்கராஜ் இயக்கி, வெள்ளிவிழா நாயகன் நடித்த மற்றொரு படம் "உயிரே உனக்காக". ஒரு மாற்றத்துக்கு வேண்டி இந்தப் படத்துக்கு இரட்டையர்கள் லக்ஷ்மிகாந்த்-பியரிலால் இசையைத் தமிழுக்குக் கொண்டுவந்திருப்பார் தயாரிப்பாளர் திரு. கோவை தம்பி. இரட்டையர்கள் லக்ஷ்மிகாந்த்-பியரிலால் இசை எனக்குப் பிடிக்கும். அவர்களுடைய இசை ரகளையாக இருக்கும். "ஆரிராரோ.. ஆரிராரிரோ.....தேனுரும் ராகம் ", "பல்லவி இல்லாமல் பாடுகிறேன்", "பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல
சிரிக்க" போன்ற பாடல்களை அனைத்தும் அருமையாக இருக்கும். எனக்குப் பிடித்த
பாடல் ஜானகி அம்மா பாடிய "பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்லச் சிரிக்க".
சற்றே பெரிய பாடல். புல்லாங்குழல் ராகம் எடுத்துத் தர, குயில்கள் கிச்சு...
கிச்சு..அப்படியே ஜானகி உள்ளே வருவார். பாடல் முழுதும் பல வித கருவிகளை
ஒலிக்கவிட்டு ஜுகள் பந்தி போல, அட்டகாசமாக இசையமைத்திருப்பார்கள் இரட்டையர்கள் லக்ஷ்மிகாந்த்-பியரிலால்.
"நிலவும் நீரும் இந்த அழகுச் சோலையும் எளிமையான அந்த இறைவன் ஆலயம்....." வரிகளுக்குப் பிறகு வரும் அந்தக் கோரஸ்.......கொஞ்சம் அமைதி... பின்பு ஜானகி பாடலை முடித்துவைப்பார். நீங்களும் அந்தப் பாடலை கேளுங்களேன்:
"நிலவும் நீரும் இந்த அழகுச் சோலையும் எளிமையான அந்த இறைவன் ஆலயம்....." வரிகளுக்குப் பிறகு வரும் அந்தக் கோரஸ்.......கொஞ்சம் அமைதி... பின்பு ஜானகி பாடலை முடித்துவைப்பார். நீங்களும் அந்தப் பாடலை கேளுங்களேன்:
நன்றி: Youtube
குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.
- காளிகபாலி
We can easily identify. Raja sir and lakshmikanth only director use mostly voiln and table
ReplyDeleteWe can easily identify. Raja sir and lakshmikanth only director use mostly voiln and table
ReplyDeleteOne more hit song in this film (kannaa unnai thedugeren vaa) lovely love song
ReplyDelete