Wonderful Shopping@Amazon

Wednesday 16 February 2022

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-130

'நெஞ்சம் மறப்பதில்லை' (1963)

மீபத்தில் நாணி நடித்த 'ஷியாம் சிங்க ராய்' படம் பார்த்தேன். நாயகனின் நிகழ்காலம் மற்றும் கடந்த காலத்தை இணைத்துப் படத்தை ரசிக்கும்படி இயக்கியிருந்தார் இயக்குநர் ராகுல் சன்க்ரிட்யன். வங்காளத்தில் கதை நடைபெறும் கடந்த கால பிளஷ்பேக் பகுதியில் கலை இயக்குநரின் பங்களிப்பு படத்துக்குப் பெருந்துணை.

மறுபிறவி / மறுஜென்ம கதைகள் தமிழுக்குப் புதிதில்லை, இந்த ஜானரில் மெனக்கெடல் அவசியம் மற்றும் சுவாரசியமான திரைக்கதை தான் பலம். இந்த ஜானர் பக்கம் யாரும் போவது கிடையாது, கொஞ்சம் ரிஸ்க்கானது. வெகு சில இயக்குநர்களே வெற்றியைச் சுவைத்திருக்கிறார்கள். (உதாரணம் : 'மகதீரா' இயக்குநர் எஸ் எஸ் ராஜமௌலி). சும்மா ஹிப்னோடிசம், மனோதத்துவம் என ஜால்ல்லியடிக்க முடியாது.  அசல் உலகத்தை ரசிகன் கண் முன்னே நிறுத்த வேண்டும். ரசிகனை சீட்-நுனிக்கு கொண்டுவரவேண்டும்.

உலகநாயகன் கூட இந்த ஜானரில் ஒரு படம் செய்திருக்கிறார். இயக்குநர்      எஸ் பி முத்துராமன் இயக்கி, கமல், ஷோபனா (அறிமுகம்), ஸ்ரீப்ரியா, சத்யராஜ் மற்றும் பலர் நடித்து 1984 ஆம் ஆண்டு வெளிவந்த 'எனக்குள் ஒருவன்'. இது ஹிந்தியில் வெளியான 'கர்ஸ்' படத்தின் ரீமேக்.  இசைஞானியின் இனிய பாடல்கள், கமலின் டிஸ்கோ நடனம் எனப் படம் engaging-ஆக இருக்கும்.

நடிகர் நாசர் இயக்கி 1997-ஆம ஆண்டு 'தேவதை' படம் கூட ஒரு மறுபிறவி / மறுஜென்ம கதை தான். படம் வரவேற்பைப் பெறவில்லை.

மறுபிறவி / மறுஜென்ம கதைகள் கொண்ட படங்களுக்கெல்லாம் முன்னோடி அல்லது முதல் படம் இது என்று கூடச் சொல்லலாம். இயக்குநர் ஸ்ரீதர் இயக்கி வெளிவந்த 'நெஞ்சம் மறப்பதில்லை'  என்றதும் இனிய பாடல்களும், தேவிகாவின் நடிப்பும் மற்றும் நம்பியாரின் வில்லத்தனமும் தான் ஞாபகம்  வருகிறது.

1935-1939  காலகட்டங்களில் கடந்த கால வாழ்க்கையை நினைவில் வைத்திருப்பதாக்க கூறும் நபர்களைப் பற்றிய செய்திகளால் கவரப்பட்ட இயக்குநர் ஸ்ரீதர். மறுஜென்மம்/மறுபிறவியை மையமாக வைத்து 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்திற்கான திரைக்கதையை உருவாக்கினார்.

1963-ஆம் ஆண்டு வெளிவந்த படம் 'நெஞ்சம் மறப்பதில்லை' கல்யாண் குமார் மற்றும் தேவிகா, எம்.என்.நம்பியார், எஸ்.வி.சஹஸ்ரநாமம், நாகேஷ், பத்மினி பிரியதர்ஷினி மற்றும் மனோரமா ஆகியோர் துணை வேடங்களில் நடித்து, ஸ்ரீதர் இயக்கினார். வணிக ரீதியாக வெற்றியடையவில்லை என்றாலும் ஃபார்முலா திரைக்கதையிலிருந்து மாறுபட்ட 'நெஞ்சம் மறப்பதில்லை' தமிழ் சினிமாவில் கல்ட் படங்களில் ஒன்று மற்றும் இயக்குநர் ஸ்ரீதரின் Masterpiece என்பதில் சந்தேகமில்லை. இந்த படத்துக்குப் பிறகு இயக்குநர் ஸ்ரீதர் தனது பழைய பாணிக்குத் திரும்பினார்.

வில்லனான நம்பியாரின் ஜமீன்தார் கதாபாத்திரத்திற்கான ஒப்பனை செய்ய மூன்று மணிநேரம் பிடித்தது.

ஜமீன்தார் நாயகனையும், நாயகியையும் குதிரை வண்டியில் துரத்தும் காட்சியினை விறுவிறுப்பு குறையாமல் அற்புதமாகப் படமாக்கியிருப்பார் ஒளிப்பதிவு மேதை ஏ. வின்சென்ட்.

மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையமைத்த அனத்த பாடல்களும் வரவேற்பைப் பெற்றன மற்றும் பின்னணி இசை படத்திற்கு பலத்தைக் கூட்டின.

இந்த படம் யுடியூப் தளத்தில் காணக்கிடைக்கிறது. 
 
 
- காளிகபாலி    

நன்றி: https://www.youtube.com

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.

 
 

No comments:

Post a Comment