Wonderful Shopping@Amazon

Tuesday 15 October 2019

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-17

செம்பருத்தி (1992)

ம்பத்தூர் ராக்கி திரையரங்கில் நானும் எனது நண்பனும் பார்த்த படம்.  வழக்கமான காதல் கதை தான். புதிதாக ஒன்றும் இல்லை  ஆனால் ராஜாவின் இசையில் சூப்பர் ஹிட் பாடல்கள் ஊரெங்கும் ஒலித்தது. இப்போது கூட கேட்கலாம்.

காலஞ்சென்ற அமரர் திரு நாகூர் ஹனிபா அவர்கள் பாடிய திமுக கட்சி பாடல்களை கேட்டிருக்கிறேன். அவரின் இஸ்லாமியப் பாடல்கள் மனதை வசீகரிக்கும். அவரை போலவே பாடுபவர்கள் இருந்தாலும்,  இனி அது போன்றொரு குரலைக் கேட்கமுடியாது. "பாவமன்னிப்பு" படத்தில் இடம்பெற்ற "எல்லோரும் கொண்டாடுவோம்" பாடலில் தொடங்கியது அவர் குரலின் வீச்சு. அவர் குரல் ஒலிக்காத தமிழக ஊர்களே இல்லை எனலாம். 

அடுத்து, ஆர் கே செல்வமணி இயக்கத்தில் வெளிவந்த  "செம்பருத்தி" படத்தில் அமரர் திரு நாகூர் ஹனிபா அவர்கள் பாடிய  அருமையான பாடல் "காதலே தனிமையிலே". தரமான தலையணியுடன் கேட்டுப்பாருங்கள். விஸ்தீரணமான குரல், பாடலை கேட்டு முடித்தவுடன் உங்களைக் கொஞ்ச நேரம் ஆக்கிரமிக்கும். இதோ அந்த பாடல்.



நன்றி: Youtube



குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி


No comments:

Post a Comment