Wonderful Shopping@Amazon

Friday 25 October 2019

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-22

என் ராசாவின் மனசிலே (1991)

கோடை விடுமுறை, புதன்கிழமை, மாமா சினிமா பார்க்க காசு கொடுத்தார்.
நானும் எனது நண்பனும் மிதிவண்டி எடுத்துக்கொண்டு படம் பார்க்க மதிய காட்சிக்குச் சங்கம் திரையரங்கம் சென்றோம். அந்தப் படத்தின் கதாநாயகனுக்குப் பெரிய கட்அவுட் வைத்திருந்தார்கள். பெண்கள் கூட்டம் அலைமோதியது, முட்டி மோதி பார்த்தும் டிக்கெட் கிடைக்கவில்லை. ஏமாற்றத்துடன் திரும்பி வந்தோம். அதற்குப்பதில் வேறு எதோ படம் பார்த்ததாக நினைவு. பெயர் ஞாபகம் இல்லை.

சில நாள் கழித்து, மீண்டும் முயற்சித்தோம், மேலே சொன்னதே நடந்தது. சில வாரங்கள் ஆன பிறகு வீடியோ கேசட் வெளியிட்டார்கள், தினத்தந்தியில்
விளம்பரம் வந்தவுடன், வீடியோ கேசட் வாங்கிப் படம் பார்த்தோம்.

இதில் விஷயம் என்னவென்றால், அன்றைய சில கதாநாயகர்களுக்கு (டிஆர் மற்றும் ராஜ்கிரண்) கணிசமான பெண் ரசிகைகள் கூட்டம் இருந்தது. குறிப்பாக நடிகர் ராஜ்கிரண் படம் வந்தால், பெண்கள் திரையரங்குக்குப் படையெடுப்பார்கள். அவருடைய படங்கள் வரிசையாக வெற்றி பெற ஒரு காரணமாக அமைந்தது மற்றும் ராஜாவின் இசை.

மேலே சொன்ன படம் இயக்குனர் கஸ்துரி ராஜாவின் இயக்கத்தில், ராஜ்கிரண் நடித்து 91-ஆம் வருடம் தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளிவந்த "என் ராசாவின் மனசிலே". வைகை புயல் வடிவேலு நடித்து வெளிவந்த முதல் படம். கோடை விடுமுறையில் படம் பார்க்க எத்தனித்த போது ஏற்பட்ட அனுபவம்.

"என் ராசாவின் மனசிலே" படத்தில் பாடகி சுவர்ணலதா பாடிய "குயில் பாட்டு"
எனக்குப் பிடிக்கும். நான் முன்பே சொன்னது போலச் சுவர்ணலதாவின் குரல்
தனித்தன்மை வாய்ந்தது. அதனால் தான் இன்றும் இந்தப் பாடலை கேட்கமுடிகிறது.  இதோ அந்தப் பாடல்:




நன்றி: Youtube



குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி          

1 comment:

  1. Kuyil paatu....in swarnlatha voice really superb. That lovely song in her voice coincide with the movie story

    ReplyDelete