Wonderful Shopping@Amazon

Thursday 31 October 2019

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-26

இளமை ஊஞ்சலாடுகிறது (1978)

ப்போதெல்லாம் திருமணம் வீடுகளில் நடக்கும். நான்கு நாளைக்கு முன்பே, ஒலிபெருக்கி சகிதாம் வந்து இறங்குவார்கள் மைக்-செட்-சவுண்ட் சர்விஸ் ஆட்கள். அப்போது பிரபலமாக உள்ள அனைத்து திரைப்பட இசைத் தட்டுகளை ஒவ்வொன்றாகப் போட்டு அலறவிடுவார்கள். இத்தனைக்கும் அப்போது மோனோ ஒளி அமைப்பு தான், அதுவே கேட்கப் பிரம்மாண்டமாக இருக்கும். அப்படிக் கேட்டது தான் இயக்குநர் ஸ்ரீதர் இயக்கி, கமல்-ரஜினி நடித்து, ராஜா சார் இசையமைத்த வெற்றிப்படமான "இளமை ஊஞ்சலாடுகிறது" படப் பாடல்கள். மலேசிய வாசுதேவன் ரகளையாகப் பாடிய "தண்ணி கருதிருச்சி" பாடல் தொடங்கி "என்னடி மீனாட்சி " வரை திரும்பத் திரும்ப ஒலிக்க விட்டார்கள்.

சாதாரணமாக மென்மையான பாடல்களைப் பாடும் பாடகி திருமதி வாணி ஜெயராம் இதில் Fast Beat பாடலை பாடியிருப்பார்.  "நீ கேட்டால் நான்..." என்ற பாடல் தான் அது. இந்தப் பாட்டைக் கேட்கும்போதெல்லாம் எனக்கு அந்தக் கல்யாண வீடு தான் ஞாபகம் வருகிறது.



 நன்றி: Youtube




குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி          

2 comments:

  1. Enadi meenachi my favorite song in this flim

    ReplyDelete
  2. Enadi meenachi my favorite song in this flim

    ReplyDelete