Wonderful Shopping@Amazon

Thursday 24 October 2019

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-21

யாதோன் கி பாரத் (1973)

இந்தியாவின் தலைசிறந்த கதை-திரைக்கதை ஆசிரியர்களான சலீம்-ஜாவேத் எழுத்தில் உருவான "யாதோன் கி பாரத்" இந்திய சினிமாவின் பல முன்னுதாரணங்களைக் கொண்ட படம். பல நட்சத்திர நடிகர்கள் ஒரே படத்தில், காதல், ரொமான்ஸ், ஆக்ஷன், செண்டிமெண்ட், பழிவாங்கல் எனக் கலந்து கட்டி வந்த படம். அதற்குப்பிறகு வந்த படங்கள் அனைத்தும் இதே முறையைப் பின்பற்றி வந்தது.

"யாதோன் கி பாரத்" இந்தி படம் பல மொழிகளில் மறு ஆக்கம் செய்யப்பட்டது. தமிழில் எம் ஜி ஆர் இரு வேடங்களில் நடித்து "நாளை நமதே" என்ற பெயரில் வெளியாகி ஹிட்டடித்தது பின்பு தெரிந்துகொண்டேன்.

பள்ளி நாட்களில் தூர்தர்ஷனில் சனிக்கிழமை தோறும் இந்தி படம் மற்றும் ஞாயிறு தோறும் தமிழ்ப் படம் போடுவார்கள். ஒரு மாலை வேளையில் "யாதோன் கி பாரத்" இந்தி படம் போட்டார்கள். மொழி தெரியவில்லையென்றாலும் ஒரு மாதிரி கமர்சியல் அம்சங்கள் நிறைந்திருந்ததால், ஆர்வமுடன் பார்த்தோம். ஆனால் "சுரா லியா ஹை தும்நெ ஜோ தில் கோ " என்ற பாடல் என் நினைவில் பதிந்துவிட்டது. 

ஆர் டி பர்மன் இசையில் ஆஷா போஸ்லே மயக்கும் குரலில் ரகளையாகப் பாடியிருப்பார். இந்தப் பாடல் எனக்கு எப்போதும் பிடிக்கும். பாடலின் பிற்பகுதியில் பாடகர் முகமது ரபி உள்ளே வருவார். இடையே இடையே வரும் சாக்ஸபோன் interlude அருமையாக இருக்கும்.  இதோ நீங்களும் அந்த பாடலை கேளுங்கள் :


நன்றி: Youtube



குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி          


2 comments:

  1. Before 15 to 20 years I used to go to recording shop with a list of Tamil songs and hindi songs with a tdk 90 cassete .but now ur blog is enough no need a list.all song's r unforgettable.

    ReplyDelete
  2. In younger day I don't know the lyrics of the song chura liya.but I used sing the full song by humbing itself .

    ReplyDelete