Wonderful Shopping@Amazon

Tuesday 15 October 2019

மூளையை கசக்கு

ன்னுடன் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து, சொந்த தொழில் செய்யும் நண்பரின் தாரக மந்திரம் "மூளையைக் கசக்கு". எப்போதும் தான் தொடங்கப்போகும் தொழிலைப் பற்றிய சிந்தனையே மேலோங்கி இருக்கும். என்னென்ன தோன்றுகிறதோ அத்தனையும் ஒரு நாட்குறிப்பில் பதிவு செய்துகொள்வார். தொழில் தொடங்குவதற்கு முன்பிருந்தே அதற்கான திட்டச் செலவினங்கள், திடீர் செலவுகளைச் சமாளிக்க வேண்டி கையிருப்பை எவ்வளவு வைத்திருப்பது, கட்டிடப் பொறியாளர் தயாரித்துக் கொடுத்த கட்டிட வரைபட அறிக்கை, அரசு அனுமதி வாங்கத் தேவையான துணை காகிதங்கள், வங்கிக் கடன் வாங்கத் தேவையான காகிதங்கள் என எல்லாம் தயாராக வைத்திருப்பார்.

தினமும் நாளிதழில் வரும் அனைத்து விளம்பரங்களையும் விடாமல் பார்ப்பதும், இணையத்தில் அந்தக் குறிப்பிட்ட நிறுவன இணையத்தளத்தில் பார்ப்பதும் அவர் வழக்கம். சொந்த தொழில் என்பது விபத்து அல்ல, அது தானாக ஏற்றுக்கொண்ட ஒரு தவ வாழ்க்கை என்பது அவருடைய குறிக்கோள். மேலே சொன்னதெல்லாம் அவர்
ஒவ்வொருவரிடமும் கேட்டு/ புத்தகங்கள் படித்துத் தெரிந்துகொண்டு உருவாக்கிக் கொண்ட வழிமுறை.

அந்த நாளும் வந்தது நாளிதழில் விளம்பரம் வந்தது, விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்வதற்கென்றே பிரத்தியேகமான ஆட்கள் உண்டு.
தில் bidding தொகையைக் குறிப்பிடுவது முக்கியம். இதில் அனுபவம் உள்ள நபரைத் தேர்ந்தெடுத்து, அவரை வைத்து விண்ணப்பித்தார். பிறகு எப்போதும் போலத் தான் பணிபுரியும் அலுவலக வேலையைப் பார்த்தார். சில மாதங்கள் கழித்து விண்ணப்பித்த நிறுவனத்திலிருந்து வந்த அதிகாரிகள் தன்னுடைய நிலத்தை பார்த்துப் போனார்கள். முக்கியச் சாலையில் நிலம் மற்றும் bidding தொகை காரணமாக இவருடைய விண்ணப்பம் தேர்வானது. மேலும் நிறுவனம் அந்த இடத்தில் அமையவிருக்கும் தனது கிளைக்கு அதிகத் தொகை ஒதுக்கியது.

அதன் பிறகு பல்வேறு அரசுத் துறைகளிடமிருந்து அனுமதி, அதற்கென்று உள்ள நபரைப் பிடித்து அவரிடம் பணியை ஒப்படைத்தார். அவருடைய கட்டணம் ரூபாய் இரண்டு லட்சம். இதற்கிடையில் தனது மகனை ஒரு நிறுவனத்தில் இரண்டு மாதம் பயிற்சிக்கு அனுப்பினார்.

நிறுவன ஒப்பந்த பத்திரத்தில் கையொப்பமிடுவதற்கு ஒரு நாளுக்கு முன்பு அரசுத் துறைகளிடமிருந்து அனுமதி பெற்ற காகிதங்கள் வருவதற்கும் சரியாக இருந்தது. வைப்புத்தொகையைக் காட்டினார். பிறகென்ன நிறுவனம் தனது வேலை ஆரம்பித்தது. இனி பிரச்சனை இல்லை, களத்தில்/தளத்தில் தான் கண்டிப்பாக இருக்க வேண்டும், வேலைக்கு வந்துகொண்டு
ம், போய்க்கொண்டும் இருந்தால் வேலைக்காகாது எனக் கருதி தனது வேலையை ராஜினாமா செய்தார். தான் பணிபுரிந்த நிறுவனம் வியப்பாகப் பார்த்தது. லட்சியம் உறுதியாக இருக்கும்போது யார் என்ன செய்யமுடியும்.

பிறகு இரண்டு மாதம் கழித்துத் தனது நிறுவனத்தை எளியமுறையில் தொடங்கி விட்டதாக எனக்கு மட்டும் தகவல் சொன்னார். பணிபுரிந்த நிறுவனத்திலிருந்து யாரையும் அழைக்கவில்லை, காரணம் பல சொன்னார். அதில் முதல் காரணம் பொறாமை.

சரி அவரைப் பற்றிய சிறுகுறிப்பு:


தந்தையின் அகல மரணத்தால் பள்ளிப் படிப்பைத் தொடர முடியாமல் போனது, தனது தந்தை பணிபுரிந்த நிறுவனத்தில் கருணை அடிப்படையில் வேலை கிடைத்தது. திறம்பட வேலை செய்து நல்ல பெயர் வாங்கினார். தனது அம்மாவின் நகைகளை வைத்து, வீட்டு காலி நிலத்தில்

ஒரு கடை, இரண்டு வீடுகளைக் கட்டி வாடகை விட்டார். வாடகை பணம், சம்பளப் பணம் எனச் சேர்த்த பணத்தில் அந்தக் காலகட்டத்தில் சென்னை புறநகர்ப் பகுதியில் சொற்ப தொகையில் நிலங்களை வாங்கிப் போட்டார், அடுத்த இருபது வருடங்களில் அது ராக்கெட் வேகத்தில் விலையேற்றம் காணப் போகிறது என்று தெரியாமல். அதில் ஒன்றில் சில கடைகளைக் கட்டி வாடகை விட்டார். இதற்கிடையில் திருமணம், குழந்தைகள் எனக் குடும்பம் பெரிதானது. அம்மாவும் மனைவியும் தான் அவரது பலம். அப்படி வாங்கிப் போட்ட நிலத்தில் தான் முருகன் பெயரில் இன்று தனது வாகன எரிபொருள் நிலையம் அமைத்துள்ளார் அந்த நண்பர்.  வாழ்நாள் இலட்சியம், பத்து வருட காத்திருப்பு மற்றும் முயற்சி நன்றாகவே பலன் கொடுத்தது.

வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் தூரதேசத்தில், வேறு மாநிலத்தில் அல்லது வெளிநாட்டினரை மேற்கோள் கட்ட வேண்டாம் நம்மைச் சுற்றியும் வெற்றி மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களைப் பொறாமையுடன் பார்ப்பதை விட்டு அதற்குப் பின் உள்ள உழைப்பைப் பார்த்தால் போதும் நமக்குத் தேவையான பாடம் ஏதாவது ஒன்று அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளலாம். நான் கற்றுக்கொண்ட பாடம் "மூளையைக் கசக்கு".


Image: Thanks,Google 

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி

1 comment:

  1. தொழில் தொடங்க முக்கியமாக நான் கருதுவது
    1. Financial acumen(cash flow, budget, forecasting)
    2. Subject knowledge with good demonstrating ability
    3. Thorough Research &study of market
    4. Planning (men, machine, infra)
    5. Customer relationship.

    Money comes the last as it is least important to built a strong industry.

    You can hire/ buy all the 2~5 but the first one is the key in buliding a successful empire. If one doesn't have financial acumen/understanding, then chances of failure is high..
    This is where the Rajastanis/Gujjus/marathas in Tamilnadu excel..You can see them owning gold, Pawn, electrial, garment, plastic shops.
    From my experience I see most of friends, relatives fail to understand the importance of financial understanding & miserable fail their startup blaming the business.

    ReplyDelete