Wonderful Shopping@Amazon

Thursday 3 October 2019

ஒரு முறை நிகழும் மாயாஜாலம் - 16


முந்தானை முடிச்சு (1983)

முந்தானை முடிச்சுப் படம் பற்றி ஏராளமான விஷயங்கள் இணையத்தளத்தில் காணக் கிடைக்கிறது. அதனால் அதைப் பற்றிப் பேசப் போவதில்லை. இது வேறு தகவல்....

உங்களுக்குத் தெரியுமா ... அக்காலத்தில் முந்தானை முடிச்சு ஒலிச்சித்திர ஆடியோ காஸெட் அதிக அளவில் விற்றுத் தீர்ந்தது. ஊரில் எந்தத் தேநீர்க் கடைக்குப் போனாலும் முந்தானை முடிச்சு ஒலிச்சித்திரம் கேட்கும், மக்களும் சளைக்காமல் கேட்பார்கள். சினிமா - One Time Wonder. காஸெட் அப்படி இல்லை எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம்.

எங்கள் அண்ணன் பெருமாள் தினமும் ஒரு முறையேனும் முந்தானை முடிச்சு ஒலிச்சித்திரம் கேட்டு விடுவார். ஒரு கட்டத்தில் வசனங்கள் எல்லாம் மனப்பாடம் ஆகிவிட்டது. கேட்டு முடித்தவுடன் படப் பாடல்களை ஒலிக்கவிட்டு, அதையும் ஒரு ரவுண்டு கேட்டு முடிப்பார். "விளக்கு வெச்ச நேரத்துல....". பாடல் எனக்குப் பிடிக்கும்.

பிறகு கொஞ்ச நாள் கழித்து VCR -வீடியோ காஸெட் அந்தப் படம் பார்த்தேன், நான் முதலில் பார்த்த பாக்யராஜ் படம் முந்தானை முடிச்சு ......
நாயகன் பாக்யராஜ், கதாநாயகி ஊர்வசி மற்றும் ஊர் பெரியவர்கள் மத்தியில் நடக்கும் அந்த முக்கியமான காட்சி, பிறகு ஊர்வசி குழந்தையைத் தாண்டுவது போன்ற காட்சி வரும்....அந்த இடத்தில ராஜா போட்ட பின்னணியிசை அமர்க்களமாக இருக்கும். இதோ அந்தக் காட்சி:
 நன்றி: Youtube



குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி

 

1 comment: