Wonderful Shopping@Amazon

Tuesday 22 October 2019

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-20

ஆராதனா (1969)

காதல் இளவரசன் ராஜேஷ்கண்ணா-சர்மிளா தாகூர் நடித்து, 1969-ஆம் ஆண்டு வெளிவந்து இந்தியா முழுவதும் வெற்றிபெற்ற காதல் சித்திரம். பல மொழிகளில் இப்படம் மறு ஆக்கம் செய்திருந்தாலும், அசல் வெளியீடான "ஆராதனா" எப்போதுமே பெஸ்ட்.

அப்போது தூர்தர்சனில் புதன் கிழமை இரவு தோறும் ஒளிபரப்பாகும் "சித்ராஹார்" நிகழ்ச்சியில் அடிக்கடி கிஷோர் குமார் பாடிய "மேரே சப்னோ கி ராணி...." என்ற பாடலை போடுவார்கள். ராஜேஷ்கண்ணா ஜீப்பில் பாடிய படி வர, ரயிலில் பயணம் செய்யும் சர்மிளா ஓரக்கண்ணால் இடையே, இடையே பார்க்க எனப் பாடல் அழகாக இருக்கும்.

இப்போது விஷயம் அதுவல்ல, ஆராதனா படத்தில் இன்னொரு பாடல் உண்டு "ரூப் தேரா மஸ்தானா பியார்" என்ற பாடல் காலஞ்சென்ற பாடகர் கிஷோர் குமார் கிறங்கடிக்கும் குரலில் அனாயாசமாகப் பாடியிருப்பார். மேற்கத்திய இசை, ஹிந்துஸ்தானி இசை எனக் கலந்துகட்டி விருந்து படைத்திருப்பார் இசையமைப்பாளர் எஸ் டி பர்மன்.

இன்னொன்று காதல் இளவரசன் ராஜேஷ்கண்ணா-சர்மிளா தாகூர் கெமிஸ்ட்ரி, பிசிக்ஸ் எல்லாம் நன்றாக ஒர்கவுட் ஆகியிருக்கும்.



 

குறிப்பு: ஆராதனா ஹிந்தி படத்தில் மறுஆக்கத்தில் நடிகர் திலகம் நடித்து "சிவகாமியின் செல்வன்" என்ற பெயரில் வெளிவந்து வெற்றிபெற்றது. அதைப் பற்றிய சுவையான தகவல்களை இந்தச் சுட்டியை அழுத்தித் தெரிந்து கொள்ளலாம்.
https://www.vikatan.com/anniversaries/kollywood/61774-sivakamiyin-selvan-movie-analytics


நன்றி: Youtube



குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி          

2 comments:

  1. As I told before the songs u choose in Tamil and hindi having history in some one's life like me. Unforgettable (2 yrs before we gone for a tour only friends we traveled by bus from Delhi to wahaa mic system was in the bus to announce. I used 8 mic to sing the song mere soon ke rani .what beauty in this is no one is study all are full the bus driver stopped the bus.

    ReplyDelete
  2. Both the songs were superhit and i believe that everyone in Tamilnadu sings atleast two lines if it.

    ReplyDelete