Wonderful Shopping@Amazon

Friday 27 September 2019

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-15

சத்ரியன்(1990)

த்ரியன் - வித்தியாசமான விஜயகாந்த்தை இதில் பார்க்கலாம். விஜயகாந்த்துக்கு மொத்தமே ஒரு பக்கத்துக்குத் தான் வசனமே. வழக்கமான பழிவாங்கல் கதை தான் அதை மணிரத்தினம் சிஷ்யர் கே சுபாஷ் தனது திரைக்கதையால் மெருகேற்றியிருப்பார். படம் கொஞ்சம் Violent-ஆக இருக்கும். கதாநாயகனுக்கு (பன்னீர்செல்வம்) இணையான கதாபாத்திரம் வில்லன் (அருமைநாயகம்). மலையாள நடிகர் திலகன் இதில் பின்னியிருப்பார். அவர் பேசும் "பழைய பன்னீர்செல்வமா வரனும் " என்ற வசனம் மெர்சலாக இருக்கும்.

இதில், சரியாகச் சொன்னீர்கள்....... அந்தப் பாட்டு தான். என்ன சொல்வது இந்தப் பாடலை பற்றி... சுவர்ணலதாவின் சொக்க வைக்கும் குரலைப் பற்றிச் சொல்வதா, அல்லது பானுப்ரியாவின் நளினத்தைப் பற்றிச் சொல்வதா, அல்லது படமாக்கிய இயக்குநரைப் பற்றிச் சொல்வதா, பாடலை எழுதிய கவிஞர் வாலியின் வரிகளைச் சொல்வதா அல்லது ராஜா சாரின் இசை அமைப்பு பற்றிச் சொல்வதா தெரியவில்லை. மொத்தத்தில் ஐவர் நிகழ்த்திய மாயாஜாலம்.

பாடகிகள் ஜென்சி, எஸ் பி சைலஜா, உமா ரமணன் போன்று சுவர்ணலதாவின் குரலும் தனித்துவமானது. "அட டா நானும் மீனைப் போலக் கடலில் பாயக்கூடுமோ......" அந்த இடத்தில் கவனம் வைத்துக் கேளுங்கள், அந்தக் குரலின் விஸ்தீரணத்தைப் புரிந்துகொள்ளலாம்.
இதோ அந்த பாடல் : 



நன்றி: Youtube



குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி

No comments:

Post a Comment