Wonderful Shopping@Amazon

Thursday 26 September 2019

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-14

மகாநதி(1994)

1994-ஆம் ஆண்டு பொங்கல் வெளியீடாக வந்தது. காணும் பொங்கல் அன்று அனந்த திரையரங்கில் பார்த்தேன்.  பெரிய திரை, விசாலமான அரங்கு, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பார்த்த படம். சாதாரண வணிகப் படம் போல் அல்லாமல் ஒரு மாதிரி வித்தியாசமாய் எடுத்திருப்பார் கமல். என்னைப் பாதித்த படங்களில் மகாநதியும் ஒன்று.  என்னுடன் வந்த நண்பர் கடைசி நேரத்தில் லிட்டில் ஆனந்த்தில் வேறு படம் சென்று விட்டார். படத்தைப் பற்றிச் சிலாகித்து  சொன்னவுடன், நல்ல படம் பார்க்கத் தவறவிட்டதை எண்ணி வருந்தினார். அந்தச் சிறை சண்டைக் காட்சி மற்றும் கிளைமாக்ஸ் படத்தின் Highlight. மகாநதி - சிறந்த படத்துக்கான தேசிய விருது பெற்ற படம்.

சரி விஷயத்துக்கு வருவோம், படத்தின் தொடக்கப் பாடலான "பொங்கலோ, பொங்கல்", இப்போதும் பொங்கலன்று எல்லாத் தொலைக்காட்சிகளிலும் ஒலிக்கிறது. ஆனால் இப்படத்தில் இன்னொரு அழகான பாடல் உண்டு. "ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம்.." எஸ்.பி.பி மற்றும் திருமதி உமா ரமணன் அவர்களின் காந்தக் குரலும் பாடலுக்குப் புதிய வண்ண சேர்க்கும்.
 



நன்றி: Youtube



குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி



No comments:

Post a Comment