Wonderful Shopping@Amazon

Friday 20 September 2019

ஒரு முறை நிகழும் மாயாஜாலம் - 8

விதி (1984)
மிழில் பராசக்தி, திகம்பரசாமியார், எதிரொலி முதல் சமீபத்தில் வந்த நேர்கொண்ட பார்வை வரை என எண்ணற்ற Court Drama படங்கள் வந்திருக்கின்றன. இந்தப் படமும் அது போல ஒரு படம் தான்.   Court Drama படங்கள் Docu Drama படமாக மாறும் வாய்ப்புண்டு, சுவாரஸ்யமாக அதைச் சொல்லாத பட்சத்தில்.
 
திரைத்துறையில் வெற்றி தோல்வியைக் கணிக்கவே முடியாது. சிறுவயது முதல் திரைத்துறையில் ஊறிப்போன இவருக்கு ஓரளவுக்கு வெற்றியைக் கணிக்க முடிந்திருக்கிறது. எந்த மொழியில், எந்தப் படம் பிரம்மாண்ட வெற்றியாக ஓடுகிறது என்று நேரடியாகவே பார்த்துத் தெரிந்துகொள்வார். அந்தப் படத்தின் உரிமையை வாங்கித் தமிழுக்கேற்றாற்போல் மாற்றி, படம் எடுத்து வெற்றி பெறுவார்.

அப்படித் தான் தெலுங்கில் சிரஞ்சீவி நடித்த "நியாயம் காவாலி" என்ற படம் நன்றாக ஓடுவதை அறிந்த திரு K பாலாஜி அவர்கள் அதன் உரிமையை வாங்கித் தமிழில் எடுத்த படம் தான் விதி. வில்லன் கதாநாயகனாகலாம், கதாநாயகனாக நடித்துக்கொண்டிருந்த மோகன் எதிர்மறை நாயகனாக நடித்த படம்.

"விதி" 1984-ஆம் ஆண்டு வெளிவந்து சூறாவளி ஓட்டம் ஓடியது. இப்படத்தின் விளம்பரம் தினத்தந்தி தினசரி நாளிதழில் தலைகீழாகப் பிரசுரமானது நினைவிருக்கிறது.

ஊரெங்கும் உள்ள டி கடைகளில் "விதி" படம் ஒலிச்சித்திர வடிவில் கேசட் ரீல் அந்து போகிறவரை மக்கள் கேட்டு, ரசித்து, மகிழ்ந்தார்கள். கூர்மையான அரூர்தாஸின் வசனங்கள் பேசப்பட்டது. தூர்தர்சனில் ஒளியும் ஒலியும் நிகழ்ச்சியில் அடிக்கடி "தேவதாசும் நானும்" பாட்டுப் போடுவார்கள். பிறகு ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை தூர்தர்சனில் ஒளிபரப்பானது.

எல்லாக் காலகட்டத்திலும் பெண்களை ஏய்க்கும் ஆண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இரண்டு படமும் ஒரே விஷயத்தைத் தான் பேசியது.

"அதோ அந்த தயாநிதி தான் ......." என்ற வசனம் இன்னும் ஞாபகமிருக்கிறது. 
இதோ அந்த காட்சி உங்களுக்காக:
 
நன்றி : Youtube



குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.




- காளிகபாலி

No comments:

Post a Comment