Wonderful Shopping@Amazon

Friday 20 September 2019

ஒரு முறை நிகழும் மாயாஜாலம் - 9

பகல் நிலவு (1985)

ல்லவி ஆரம்பத்தில் ஆர்ப்பரிக்கும் வயலின் இசைக் கோர்வை நம்மை வரவேற்கும், புல்லாங்குழல் கிச்சு கிச்சு மூட்டும்.  ஜானகி இளங்குரலில் பாட அதைத் தொடர்ந்து ராஜா உள்ளே வருவார், பிறகு உங்கள் கற்பனை சிறகுகள் பறக்க ஆரம்பிக்கும். பாடல் ஆரம்பம் முதல் கடைசி வரை ஒரு வேகம் இருக்கும் கண்ணனை மூடிக் கொண்டு இந்தப் பாடலை இரவு தலையணியுடன் (Headphone), மெல்லிய இசையுடன் கேளுங்கள். மனது குதூகலமாகும். பாடல் இடையே இடையே வரும் ஜானகி-ராஜா ஹம்மிங் அலாதியாக இருக்கும்.  பாடல் தொடக்க முதல் கடைசிவரை ஒரு சீரான வேகம் இருக்கும். 

எப்போதுமே இஃது என்னுடைய விருப்ப பாடல். இந்தப் பாடலை ஒவ்வொரு முறை கேட்கும்போதெல்லாம், எனக்குப் புதிய எனர்ஜி கிடைக்கும்.   காலங்கள் கடந்தாலும் இப்போதும் இந்தப் பாடல் புத்தம் புதுசாக இருக்கிறது. 

பாடலை படமாக்கிய விதம் கூட அருமையாக இருக்கும். முரளி-ரேவதி Charm. பாடல் முழுதும் நம்மை வசீகரிக்கும். இது காதலர்களின் தேசிய கீதம் என்று சொல்வேன் நான் .

இயக்குநர் மணிரத்னம் - இளையராஜா தமிழில் இணைந்து நிகழ்த்திய முதல் மாயாஜாலம் - "பகல் நிலவு" படம். இதோ அந்த பாடல்:





நன்றி: Youtube



குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.




- காளிகபாலி



No comments:

Post a Comment