Wonderful Shopping@Amazon

Wednesday 27 November 2019

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-37

உதிரிப்பூக்கள் (1979)
ராணியன் மற்றும் வேற்றுமொழி திரைப்படங்களைப் பார்த்துவிட்டு நம்மவர்கள் கதைக்கும்போது, செம கடுப்பாகும். காரணம் தமிழிலேயே உலகத் தரம் வாய்ந்த (சிறந்த கதையம்சம், நினைவில் கொள்க) திரைப்படங்கள் நம்மவர்கள் தந்திருக்கிறார்கள். இதைப் படிக்கும் வாசகர்களுக்கு நன்றாகத் தெரியும். இயக்குநரின் அனுபவங்கள், வாசிப்பதினால் ஏற்பட்ட தாக்கம் தங்கள் படைப்பிலும் பிரதிபலிக்கிறது என்றே சொல்வேன்.

சரி விசயத்துக்கு வருவோம், "முள்ளும் மலரும்" வெளியாகி மாபெரும் வெற்றியடைந்தது. மகேந்திரனின் அடுத்த படத்துக்காக ரசிகர்கள் ஆவலாகக் காத்திருந்தனர்.  ரசிகர்களின் காத்திருப்பு வீண் போகவில்லை. இந்த முறை புதுமுகங்களுடன் களம் கண்டார் இயக்குநர் மகேந்திரன். 

"உதிரிப்பூக்கள்" - புதுமைப்பித்தன் எழுதிய "சிற்றன்னை" என்ற சிறுகதையைத் தழுவி இயக்குநர் மகேந்திரன் இயக்கிய படம். ராஜா சார், ஒளிப்பதிவாளர் அசோக்குமார், மற்றும் படத்தொகுப்பாளர் பி லெனின் என இதிலும் உலகத்தரம் வாய்ந்த கலைஞர்கள் பணிபுரிந்திருக்கிறார்கள். அதனால் இதுவும் உலகத் திரைப்படம் தான். தமிழ் சினிமாவின் முக்கியமான படம் /படைப்பு. சிறந்த நூறு இந்தியத் திரைப்பட வரிசையில் "உதிரிப்பூக்கள்" படமும் உண்டு.

தூர்தர்சனில் ஞாயிறு தோறும் மதியம், மாநில மொழி திரைப்பட வரிசையில் "உதிரிப்பூக்கள்" படம் ஒளிபரப்பினார்கள். அஸ்வினி, சாருஹாசன் மற்றும்  விஜயனின் நடிப்பு, பாடல்கள், பின்னணி இசை, கடைசிக் காட்சி இதெல்லாம் மனதை விட்டகலக் கொஞ்ச நாட்கள் பிடித்தது. எதோ ஒரு கிராமத்துக்குப் போய் வந்த உணர்வு.

"ஒரு ஊர்ல ஓரு ராஜா இருந்தாராம்.. இப்பவரைக்கும் அவர் தான் ராஜாவாம்..." - ராஜாவின் ரசிகர் சொன்னது. அது போல இயக்குநர் மகேந்திரனின் இயக்கம் ஒருபுறம் மிரட்டலாக இருக்க, பின்னணி இசையை ராஜா சார் காட்சிக்கு, காட்சி உயிரூட்டியிருப்பார். மொத்தத்தில் இவர்கள் இருவர் சேர்ந்து நிகழ்த்திய மாயாஜாலம், காலத்தை வென்ற படைப்பு.




நன்றி: Youtube



குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி          


2 comments:

  1. Last 4 minutes in this film tears in eyes because of the kid.
    I gone to munnar 3 times because of the song azagiya kanne.just to take a photo of a rock in the middle of tea estate. Remarkable movement

    ReplyDelete
  2. Tearful climax and evergreen songs in this film especially azagiya kannee

    ReplyDelete