Wonderful Shopping@Amazon

Monday 11 November 2019

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-28

தனியிசை பக்தி பாடல்கள்
திரைப்படப் பாடல்களின் வீச்சைத் தாண்டி சீர்காழி கோவிந்தராஜன், டி எம் சௌந்தரராஜன் ஐயா, பெங்களூர் ரமணியம்மாள் மற்றும் எல் ஆர் ஈஸ்வரி அம்மா போன்றவர்கள், முருகன், விநாயகர் மற்றும் அம்மன் மீது பாடிய பக்தி தனியிசை பக்தி பாடல்கள் 1980 களில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தப் பாடல்களைக் கேட்கும் போது, ஏதோ பக்தி படத்தில் இடம்பெற்ற பாடல்கள் போலும் என்று நினைப்பதுண்டு. பிறகு தான் தெரிந்தது அது தனியிசை பாடல்கள் என்று. எங்கள் பாட்டி வீட்டில், மாமா அடிக்கடி இவர்கள் பாடல்களைக் காலை வேளையில் ஒலிக்கவிடுவார். கேட்க, கேட்க, அப்படியே பாடல்கள் நம் மனதை ஆக்கிரமிக்கும். அதிலும் பெங்களூர் ரமணியம்மாள் அவர்களின் குரல் அபூர்வமானது. அவர் பாடிய "பொம்ம...பொம்ம..தா", "வெற்றிவேல் முருகனையும் அரோகரா" "குன்றத்திலே முருகனுக்கு" போன்ற Fast Beat பாடல்களைக் கேட்கும்போது உற்சாகமாக இருக்கும்.

எங்கள் வீட்டு அருகில் உள்ள கோயிலில் தினமும் காலையில் மேற்சொன்ன பாடல்களைப் போடுவார்கள். அப்பா புதிதாக டேப் ரெக்கார்டர் வாங்கியபோது, டிஎம்எஸ் பாடிய முருகன் பக்தி பாடல்கள் கேசட்டை வாங்கி, தினமும் கேட்பார். அதற்குப் பிறகு இப்போது வரை எத்தனையோ பேர் பக்தி பாடல்களைப் பாடியிருந்தாலும். இவர்கள் அளவுக்கு இல்லை என்பதே உண்மை. இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் இவர்களின் பாடல்கள் தமிழகக் கோவில்கள், கடைவீதி எனத் தமிழகத்தின் மூளை முடுக்கெல்லாம் கணீரென்று ஒலித்துக்கொண்டே இருக்கும்.

பெங்களூர் ரமணியம்மாள் முருகன் மீது பாடிய பக்தி பாடல் இதோ உங்களுக்காக:




நன்றி: Youtube



குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி          




2 comments: