Wonderful Shopping@Amazon

Tuesday 3 December 2019

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-38

பெரிய இடத்து பெண்(1963)

யக்குனர் ராமண்ணா இயக்கத்தில், தமிழின் சிறந்த திரைக்கதை வித்தகர் திரு சக்தி கிருஷ்ணசாமி அவர்களின் கைவண்ணத்தில் உருவான படம் "பெரிய இடத்துப் பெண்". கிராமத்தான் பணக்கார பெண்ணைக் காதலிக்க, அவள் மறுக்க, அவளுக்காக நகரத்தில் வந்து கெட்டப்பையும், அவள் மனதையும் மாற்றி, காதலை மீட்பான். இந்தப் படத்தின் கதை ஒரு Template போல. இன்று வரை இந்தக் கதையில் நடிக்காத கதாநாயகர்களே இல்லை எனலாம். இனி வரும் நடிகர்களும் நடிப்பார்கள். அடுத்த நாற்பது வருடங்களுக்கு இந்தக் கதை செல்லுபடியாகும். புரட்சித் தலைவர் எம்ஜிஆர்-உம் இந்தக் கதையில் நடித்தார். கிராமத்துக் கதை என்றால் அவருக்கு அல்வா சாப்பிடுவது போல. வெகு சிறப்பாக நடித்திருப்பார். கிராமப்புற ரசிகர்கள் அவருக்கு அதிகம். அதனால் தான் படம் Blockbuster Hit.

எங்கள் தெருவில் உள்ள விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா ஒரு வாரம் சிறப்பாகக் கொண்டாடுவார்கள். இறுதி நாளன்று தெருவை மறித்து மிகப்பெரிய வெள்ளை துணி கட்டி, அதில் படம் காட்டுவார்கள். மூன்று படம் போடுவார்கள். திருவிளையாடல், சரஸ்வதி சபதம், பெரிய இடத்துப் பெண். இதுவே வருடா வருடா தொடரும். நாங்களும் சளைக்காமல் பார்ப்போம்.

இந்தப் படத்தில் மனதை வருடும் ஒரு lullaby. பாடல் உள்ளது. இரட்டையர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையில் பி சுசீலா, எல் ஆர் ஈஸ்வரி மற்றும் டிஎம்எஸ் பாடிய "கட்டோடு குழலாட ஆட... ஆட.."என்ற பாடல். இரவில் தலையணியுடன் (Headphone) பாடல் முழுதும் கேட்டுப் பாருங்கள். கவிஞர் கண்ணதாசனின் அருமையான வரிகளில் இது போன்ற பாடல்களைக் கேட்கும் போது தமிழை மிஞ்சிய இனிய மொழி உண்டா என்று தோன்றும் வரிகள். நீங்களும் அந்தப் பாடலை கேளுங்களேன்:



நன்றி: Youtube


குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி          





1 comment:

  1. Gently words about female in this song. I like this song

    ReplyDelete