Wonderful Shopping@Amazon

Monday 18 December 2017

ஒரே நாள் - மூன்று முருகன் கோயில்

வருடம் இரண்டு முறை (ஜனவரி & ஆகஸ்ட்)  திருச்சி பாய்லர் டவுன்ஷிப்பில் உள்ள தம்பி வீட்டுக்கு செல்வது வழக்கம். அங்கு 2 - 3  நாட்கள் தங்கி திருச்சி சுற்று வட்டாரத்தில் உள்ள கோயில்களுக்கு செல்வது பிடிக்கும். சென்னை நகர நெருக்கடியிலிருந்து ஒரு சிறிய Commercial Break.
 

என்னுடைய பயண திட்டம் எப்போதுமே சாதாரண பயணிகள் ரயில் (Passenger Train) நேரத்தை ஒட்டியே அமையும். குறைந்த செலவு, அலுப்பு இல்லா மற்றும் துரித பயணம்.

ஒரே நாளில் மூன்று முருகன் கோவில்களை தரிசிக்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி வந்தது என்று தெரியவில்லை. ஆனால் அந்த எண்ணத்தை செயல்படுத்தியது முருகன் தான். 
 
அதன்படி திருவெறும்பூரிலுருந்து காலை 7.30  மணிக்கு சாதாரண ரயில் வண்டியில் சுமார் 1.35 மணி நேர பயணம் செய்து சுவாமிமலையை அடைந்தேன்.

ரயில் நிலையம் பக்கத்திலேயே கோவில் என்று நினைத்து இறங்கினால், கோயில் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. அது திருவலன்சுழி என்ற ஊர்.  அருகிலிருப்பவர்களிடம் வழி கேட்டு, பிரதான சாலையை  கடந்து போது. சுவாமிமலை வளைவு தெரிந்தது. அங்கிருந்து  2 .கிலோ மீட்டர் என்று எழுதியிருந்தது.

சுவாமிமலை வளைவு அருகே வெள்ளை பிள்ளையார் கோயில் என்றழைக்கப்படும் திருவலன்சுழி  ஸ்வேதா விநாயகர் கோயிலில், திருவலன்சுழிநாதர், அம்பாள் மற்றும் பைரவர் தரிசனம் செய்தேன்.  பாற்கடலில் உண்டான நுரையால்  உருவானவர் ஸ்வேத விநாயகர்.  அவருக்கு அபிஷேகம் இல்லை. கை படாமல் பச்சைகற்பூரம் மட்டுமே சாற்றப்படுகிறது.

பின்பு வெளியே வந்து பஸ் / ஆட்டோ எதாவது கிடைக்கும் என்று காத்திருந்தேன். எதுவும் வருவது போல் தெரியவில்லை.  ஒரு அன்பர் தனது வாகனத்தில் ஏற்றிகொண்டு சுவாமிமலை கோயில் வாசலில் விட்டார். மூலவரை அருகிலிருந்து தரிசிக்கும் சிறப்பு தரிசன கட்டண ரூபாய் 50 /- . நிறைவான தரிசனம். கோவிலில் நெய் விளக்கு ஏற்றிவிட்டு வெளியே வந்தேன். மினி பஸ் ஒன்று ரயில் நிலையம் செல்ல காத்திருந்தது. அதில் ஏறி ரயில் நிலையம் வந்தடைந்தேன்.



அடுத்த இரண்டு மணி நேரத்தில் கும்பகோணம் வழியாக திருச்சிக்கு வந்து சேர்த்தேன். அதற்குள் மதியம் ஆகிருந்தது.  அங்கிருந்து மத்திய பேருந்து நிலையம் வந்து மதுரை செல்லும் இரண்டு நிறுத்தங்கள் மட்டுமே நிற்கும் விரைவு பேருந்தில் ஏறி விராலிமலை கோவில் வாசலில் இறங்கினேன்.

சிறிய மலை, படிக்கெட்டு வழியாக கோயிலை அடைந்தேன்.  கோயில் நடை திறந்தவுடன்,  நெய் விளக்குகள் ஏற்றி, ரூபாய் 10 /- சிறப்பு தரிசன கட்டண சீட்டு பெற்று சுவாமி தரிசனம் செய்து கிளம்பினேன். கோயிலை விட்டு படியிறங்கி திருச்சி செல்ல பேருந்து நிறுத்தம் வந்தேன். சிறுது நேரம் கழித்து மதுரைலுருந்து திருச்சி செல்லும் பேருந்து ஏறி, சத்திரம் பேருந்து நிலையம் வந்தடைந்தேன். 


வீட்டுக்கு போகலாமா அல்லது வயலூர் முருகன் கோயிலுக்கு போகலாமா என்ற குழப்பம் நீடித்தது... சரி போகலாம்....என்று வயலூர் செல்லும் பேருந்தில் ஏறினேன். சுமார் 50  நிமிட பயணம். கடைசி நிறுத்தம் வயலூர் முருகன் கோயில்.  நெய் விளக்குகள் ஏற்றி, ரூபாய் 25 /- சிறப்பு தரிசன கட்டண சீட்டு பெற்று சுவாமி தரிசனம் செய்து விட்டு  வெளியே வந்தால் லேசாக மழை தூறல். அங்கிருந்து சத்திரம் பேருந்து நிலையம் வந்து, நான் திங்கியிருக்கும் இடமான பாய்லர் தொழிற்சாலை டவுன்ஷிப் வந்தடைந்தேன்.  அப்போது நேரம் இரவு 9.00  மணி.

ஏனோ அன்று காலை, மதியம் உணவு எடுத்து கொள்ளவில்லை.  வேர்க்கடலை, கடலை உருண்டை மற்றும் ஒரு பில்டர் காப்பி மட்டுமே சாப்பிட்டேன்.

டவுன்ஷிப்பில் உள்ள ஒரு உணவகத்தில் இரவு உணவை முடித்துவிட்டு வீடு வந்து சேர்ந்தேன்.

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.

- காளிகபாலி

1 comment: