Wonderful Shopping@Amazon

Friday 8 December 2017

எழுத்து பிச்சர் பாட்டு

 
 
எழுத்து பிச்சர் பாட்டு
 
பிலிம் டிவிசன் படம் முடிகிறது.
திரையரங்கில் பேரைமதி நிலவுகிறது. 
தணிக்கை சான்றிதழ் அறிவிப்பு.

முதலில் கோவில் கோபுரம்
பட பட வென்று பறக்கும் புறாக்கள்.
பின்பு இடம்பெறும் படத்தலைப்பு.
அதை தொடர்ந்து ஆரம்பமாகும் பாடல்.



80 -90 களில் எல்லா முன்னணி இயக்குனர்களும் பின்பற்றிய உத்தி இது அபாரமான படைப்பாளிகள் அவர்கள்.

எழுத்து பிச்சர் பாட்டு - படத்தின் பெயர் போட்டவுடன் தொடங்கும் தொடக்க பாடல் அல்லது பெயர்களோடு வரும் பாட்டு. 80  -90 களில் பெருபாலும் எல்லா படங்களிலும் தவறாமல் இடம் பெற்றது.

தொடக்க பாடலை தவறவிட்டவர்கள் மீண்டும் அடுத்த காட்சி முதலிலுருந்து பார்த்தவர்களும் உண்டு.

ரசிகனை முதல் பாடலிலியே இழுத்து உட்கார வைக்க பின்பற்றப்படும் நுட்பம் இது.

எழுத்து பிச்சர் பாடல்கள் மற்றும் பாடல் வரிகள் படத்தில் கதையையோ அல்லது கதாநாயக /நாயகி பற்றியதாக இருக்கும்.  இது தான் கதை / இது தான் நாயக / நாயகியின் இயல்பு என இயக்குனர் ரசிகனுக்கு புரியவைத்துவிடுவார்.  படம் பார்க்கும் ரசிகன் படத்தில் ஒன்றா ஏதுவாயிருக்கும் இப்பாடல்.

பெரும்பாலும் ராஜா சார் பாடிய பாடல்கள் தான் அதிகம் இடம்பெற்றன. "இப்பாடலை பாடிக்கொண்டிருப்பவர் உங்கள் இசைஞானி இளையராஜா"  என்ற வரி கட்டாயம் இடம் பெரும்.  அவர் பாடிய அனைத்து எழுத்து பிச்சர் பாடல்களும் சூப்பர் ஹிட் மற்றும் வெள்ளி விழா படங்களாகும்.  ராஜா சார் எழுத்து பிச்சர் பாடலை பாடினால்  படம் ஹிட்டாகும் என்ற நம்பிக்கை நிலவிய காலமது.

இதோ சில எழுத்து பிச்சர் பாடல்களை கேட்டு பரவசமாகுங்கள்.








- காளிகபாலி







1 comment: