Wonderful Shopping@Amazon

Friday 5 June 2020

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-53


கல்நாயக் (1993)

1988-ஆம் ஆண்டு இறுதியில் நடிகை மாதுரி தீக்ஷித்-க்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தந்தது. 'தேஜாப்' என்ற படம். 'ஏக் தோ தீன்' என்ற பாடல் இந்திய முழுதும் புயலைக் கிளப்பிப் பிரபலமடைந்து ஓய்ந்திருந்த நிலையில், 1993-ஆம் ஆண்டு இயக்குநர் சுபாஷ் கை இயக்கத்தில் வெளியான 'கல்நாயக்' என்ற படத்தில் இடம் பெற்ற இந்தப் பாடல் மற்றும் மாதுரி தீக்ஷித்தின் நடனம் இந்தியாவையே ஒரு உலுக்கு உலுக்கியது. படமும் பாக்ஸ்ஆஃபிஸில் மாபெரும் வசூல் வேட்டையை நிகழ்த்தியது. மாதுரியின் நடனத்தைக் கண்டு இந்தியாவே வியந்தது.

இந்தப் பாடலில் இடம்பெற்ற தொடக்க வரிகளுக்கு ஏகப்பட்ட எதிர்ப்பு மற்றும் கடும் சர்சையையை கிளப்பியது, பல இடங்களில் போராட்டம் நடைபெற்றதாகச் செய்திகள் வெளியானது. எதிர்ப்பே படத்துக்கு இலவச விளம்பரமாக அமைந்து, படம் மாபெரும் வெற்றியைத் தேடித் தந்தது.

சரோஜ்கான் அமைத்த நடனத்துக்கு மாதுரி தீக்ஷித் மற்றும் நீனா குப்தா ஆட, அனந்த பக்ஷியின் வரிகளை அல்கா யாக்னிக் மற்றும் இலா அருண் சொக்க வைக்கும் குரலில் பாட, இரட்டை இசையமைப்பாளர்கள் லக்ஷ்மிகாந்த்-பியாரிலால் இப்பாடலுக்குப் பிரம்மாண்டமாய் இசையமைத்திருப்பார்கள்.




நன்றி: Youtube


குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.


- காளிகபாலி     


3 comments:

  1. These two songs are mostpopular songs of that time due to these songs Hindi songs gained popularity in tamilnadu really a good article by author taking us back to 90's

    ReplyDelete
  2. Beautiful writeup by the author on 90s famous actress Maadhuri Dixit. Even small kids will start dancing for that song.people who doesn't know Hindi will also humm that song. It greatly influenced almost all parts of India.

    ReplyDelete