Wonderful Shopping@Amazon

Wednesday 8 July 2020

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-68


'நாடோடி தென்றல்'(1992)

ப்போதுமே பாடல் வரிகள் தான் முத்தி செல்லும், பின்பு தான் இசை வரும். இதிலும் ஒர் அற்புத வரி உண்டு "கண்ணிமைகளை வருத்தி.., கனவுகளைத் துரத்தி.." பாடல் வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த காலமது.

ராஜா சார் பாடலை துவக்கிவைக்க, பாடல் ஆரம்பத்தில் ஷெனாய் (ஷெனாய் இசை கருவியை தனது பாடல்களில் அதிகம் பயன்படுத்தியவர் ராஜா), அதைத் தொடர்ந்து 'சல', 'சல'-வென வயலின், பின்பு புல்லாங்குழல் இசைக்கருவிகள் நம்மை வரவேற்கும், மனோ பாட, பின்பு ஜானகி அம்மா உள்ளே வருவார். பாடல் சீரான வேகத்தில் பயணிக்கும்.

'நாடோடி தென்றல்' எங்கள் ஊர் திரையரங்கில் நண்பர்களுடன் பார்த்த படம். பெரிய எதிர்பார்ப்புடன் சென்ற ஏமாற்றமே மிஞ்சியது. ''யாரும் விளையாடும் தோட்டம்'', ''மணியே மணிக்குயிலே'', ''சந்தன மார்பிலே'' போன்ற பாடல்கள் அனைத்தும் அப்போது பிரபலமடைந்தது. ஆடியோ கேசட் கூட மஞ்சள் நிற தடிமனான காகிதத்தில் படப் பெயர் அச்சிட்டு வந்தது ஞாபகம் இருக்கிறது. இந்தப் படத்தில் பாடகி மால்குடி சுபா பாடிய "All The Time" என்ற ஆங்கிலப் பாடலும் உண்டு.

இரவு கேட்கக்கூடிய ராஜாவின் பாடல் வரிசையில் இந்தப் பாடல் நிச்சயம் இடம்பெறும். அந்தப் பாடலை நீங்களும் கேளுங்களேன் :







நன்றி: Youtube


குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.


- காளிகபாலி     

 



No comments:

Post a Comment