Wonderful Shopping@Amazon

Wednesday 4 March 2020

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-49


எம் எஸ் சுப்புலக்ஷ்மி அம்மா கர்நாடக இசைவானில் ஒரு முறை நிகழ்ந்த மாயாஜாலம்.
 
தினமும் எம்எஸ் அம்மா பாடல்களுடன் என் காலைப் பொழுது தொடங்கும், சில வருடங்காக தொடர்வதில் சந்தோசம்.

"ஜோ அச்சுதானந்த.....ஜோ ஜோ முகுந்தா..........."

காபி ராகத்தில் எம்எஸ் அம்மா பாடிய இந்த அன்னமாச்சார்யா கீர்த்தனையைப் பற்றி தினமணி தீபாவளி மலரில் படித்ததாக ஞாபகம். செய்தி என்னவென்றால் ஆந்திர / தெலுங்கானா மாநிலத்தில் ஒவ்வொரு வீட்டிலும், பிறந்த குழந்தையை தொட்டிலிலிடும் வைபவத்தில் பெண்கள் இந்த அன்னமாச்சார்யா கீர்த்தனை பாடலை பாடுவார்களாம். வெகு காலமாகப் புழக்கத்தில் உள்ள கீர்த்தனை.  உடனே இந்த பாடலை பதிவிறக்கம் செய்து கேட்க ஆரம்பித்தேன். கேட்கக் கேட்க பிடிக்கும் பாடல். சாதாரணமாகத் தொடங்கும் பாடல். "முனகிட்ட நாடாரா ...." என்ற வரியில் வரும் ஆலாபனை மெல்ல நம்மை வசீகரிக்கும்.

ஹனுமான் சாலிசா

எக்ஸ்பிரஸில் சேர்ந்த புதிதில் எனக்கு முன்பிருந்த ஊழியர் கணினியில் விட்டுச் சென்ற பக்தி பாடல்கள் தொகுப்பிலிருந்த பாடல்.  அதற்கு முன்பு இந்த கீர்த்தனையைக் கேள்விப்பட்டது இல்லை. நேரமும் காலமும் வரும் போது எல்லாம் நமக்குக் கிடைக்கும் என்பார்கள் அது போல..! சில வருடங்களாக இந்த கீர்த்தனை தினமும் கேட்கிறேன். சாதாரணமாக ஆரம்பிக்கும் பாடல் மெல்ல வேகமெடுக்கும். இடையில் "ஜெய் ஜெய் ஜெய் ஹனுமான.." என்ற வரி வரும்போது மனதிற்குத் தெளிவும், தைரியமும் கொடுக்கிறது.

விஷ்ணுசஹஸ்ரநாமம் கீர்த்தனை/பாடல்/ பாசுரம் : பல பேர் பாடியிருந்தாலும் எம்எஸ் அம்மா பாடியதை தான் திருப்பதி திருமலை கோவிலில் அதிகாலை ஒளிபரப்பப்படுகிறது. காலை வேளையில் என் வீட்டிலும் தினமும் ஒலிக்கவிடுகிறேன். போக வர, போக வர..சில வார்த்தைகள் காதில் விழும். நானும் அப்படியே அந்த வரிகளுடன் சேர்ந்து 'ஹம்' செய்வதுண்டு.  அடுத்தடுத்த வரிகளுக்கு மனது தாவும்.

எனது அலுவலக நண்பர் குடியிருக்கும் குரோம்பேட்டையில் உள்ள ராமர் கோயிலில் வருடந்தோறும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி நாள் முழுதும் விஷ்ணுசஹஸ்ரநாமம் பாராயணம் நடைபெறுகிறது. ஒவ்வொரு முறை முயற்சி செய்தும் போகமுடியவில்லை. இந்த வருடம் தவறாமல் கலந்துகொள்ளவேண்டும்.

மதுரையில் பிறந்த எம்எஸ் அம்மாவுக்குத் திருப்பதி திருமலை தேவஸ்தானம் கீழ் திருப்பதி பூரணகும்ப வாயிலில் சிலை நிறுவிப் பராமரித்து வருகிறது. பெங்களூருவில் எம்எஸ் அம்மா அவர்களுக்குச் சிலை உள்ளது. தமிழ்நாட்டில் எங்கும் எம்எஸ் அம்மா அவர்களுக்குச் சிலை இல்லை என்பது உங்களுக்கு தெரியுமா ?

எம்எஸ் அம்மா எத்தனையோ பாடல்கள் பாடியிருந்தாலும், மேற்சொன்ன இரண்டு பாடல்கள் என் மனதுக்குப் பிடித்தவை.  மேலும் இந்த பாடல் யாருக்குத்தான் பிடிக்காது, நீங்களும் கேளுங்கள்:
 


நன்றி: Youtube


குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.




- காளிகபாலி     

2 comments:

  1. Very interesting. Kantrinike....song Took me to the world of peaceful thoughts. No substitution for her voice.

    ReplyDelete