Wonderful Shopping@Amazon

Thursday 23 December 2021

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-120

'83' உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் ‘முதுகெலும்பு’ பிஆர் மான் சிங் ஒரு அங்கமாக இருந்தார். 

1983 உலகக் கோப்பையில் கபில் தேவ் உள்ளே உள்ள  'டெவில்'-ஐ  உத்வேகப்படுத்தி  இறுதிப் போட்டிக்கு இட்டுச் சென்ற பெருமை அணி மேலாளர் திரு பிஆர் மான் சிங்கை சேரும். இந்திய அணிக்கு இதுவரை கிடைத்த மேலாளர்களில் சிறந்த 'மேலாளர்' என அழைக்கப்பட்டார். அந்த ஹீரோவின் கதை இங்கே:

 Reel                                    Real 

இந்திய கிரிக்கெட் அணியின் மேலாளரான பிஆர் மான் சிங் உடன் 14 வீரர்கள் கொண்ட அணி இங்கிலாந்துக்குப் புறப்பட்டுச் சென்றது. 

'மான் சாப்' மற்றும் 'மிஸ்டர் கிரிக்கெட்' என்று பிரபலமாக அறியப்பட்ட அவர் ஒரு மேலாளர் மட்டுமல்ல, ஒரு வீரராகவும் இருந்தார். வலது கை பேட்ஸ்மேன் மற்றும் ஆஃப் பிரேக் பந்துவீச்சாளர், மான் சிங் 1965 மற்றும் 1969க்கு இடையில் ஐந்து முதல்-தரப் போட்டிகளில் விளையாடினார், ரஞ்சி டிராபியில் ஹைதராபாத் மற்றும் மொயின்-உத்-டவுலா தங்கக் கோப்பை போட்டியில் ஹைதராபாத் ப்ளூஸை பிரதிநிதித்துவப்படுத்தினார். ஆனால் ஒரு வீரராக இல்லாமல் அணியின் நிர்வாகியாகச் சிறப்பாகச் செயல்பட்டார்.

1978 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்குச் சென்ற இந்திய அணியின் உதவிக் குழு மேலாளராகத் தனது பணியைத் தொடங்கினார் பிஆர் மான் சிங். 

20 ஆண்டுகளுக்குப் பிறகு, 1978 ஆம் ஆண்டு இந்திய அணியின் பாகிஸ்தானுக்கான சுற்றுப்பயணம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது. கிட்டத்தட்ட  இது ஒரு அரசியல் சுற்றுப்பயணமாக இருந்தது.  அந்த இந்திய அணியின் மேலாளர் அரசியல்வாதியாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு, பரோடா மகாராஜாவிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.  அதை ஏற்றுக்கொண்ட அவர், "நான் இந்த சுற்றுப்பயணத்திற்குச் செல்ல வேண்டும் என்றால், மான் சிங் எனது உதவியாளராக இருக்க வேண்டும்" என்றார். 

ஆறு பேர் கொண்ட தேர்வுக் குழுவின் உறுப்பினராக மான் சிங் இருந்தார். கபில்தேவை உலகக் கோப்பை போட்டிக்கு அணித்தலைவராக நியமித்தது, இது பின்னர் கபில்தேவின் அற்புதமான செயல்திறன் சாம்பியன்ஷிப்பிற்கு வழி வகுத்தது.

1983 உலகக் கோப்பை, மான் சிங்கின் பணி அவ்வளவு எளிதாக அமைந்துவிடவில்லை, இருப்பினும் அணியைச் சிறப்பாக நிர்வகித்தார் . வாரிய விதிகளைப் புறந்தள்ளி வீரர்களுக்கு ஆதரவாக இருந்தார். வீரர்கள் தங்கள் மனைவிகளுடன் ஹோட்டலில் தங்கவும், லண்டனுக்கு வெளியே உள்ள இடங்களுக்குக் குழுப் பேருந்தில் செல்லவும் அனுமதித்தார்.  அப்போது இது நினைத்துப் பார்க்க முடியாததாக இருந்தது.  

1987 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டி அரையிறுதி வரை எட்டிய இந்திய அணியின் மேலாளராக மான் சிங் இருந்தார்.  

"உண்மையில், உலக அளவில் கிரிக்கெட்டில் அதிக ஈடுபாடு கொண்ட மான் சிங் போன்ற நபரைப் பார்க்க முடியாது. மேலும் அவரது வீட்டில் உள்ள கிரிக்கெட் அருங்காட்சியகம் அவரது  கிரிக்கெட் மீதான காதலுக்கு போதுமான சான்றாகும்.” என்று முன்னாள் இந்திய அணித்தலைவர் பிஷன் சிங் பேடி மான் சிங்கின் ‘அகோனி அண்ட் எக்ஸ்டஸி’ புத்தகத்தின் முன்னுரையில் எழுதினார்.

அவரது புத்தகம் ஒரு விதிவிலக்கான படைப்பாகும், இதில் விளையாட்டுகளின் போது அற்புதமான காலங்களை நினைவுபடுத்துவதோடு மட்டுமல்லாமல் அதுவரை கேள்விப்படாத மற்றும் அறியப்படாத, அணிக்குள் நடந்த நிகழ்வுகளைப் பற்றி  விவரிக்கிறார்.

76 வயதாகும் மான் சிங், விஸ்டன் இந்தியாவிடம் கூறுகையில், "என் தந்தை என்னைச் சிறுவயதில் கிரிக்கெட் பார்க்க அழைத்துச் சென்றார், ஆனால் நான் கல்லூரிக்குச் சென்ற பிறகு தான் கிரிக்கெட் மீது ஆர்வம் வந்து தீவிரமாக விளையாட ஆரம்பித்தேன்.

முதல் உலகக் கோப்பை பட்டத்திற்கான டீம் இந்தியாவின் பயணத்தைக் காண்பிக்கும் ஸ்போர்ட்ஸ் திரைப்படமான ’83’ டிரெய்லரில் நடிகர் பங்கஜ் திரிபாதி பிஆர் மான் சிங் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார்.

'83' படத்துக்காக மான் சிங் கதாபாத்திரத்திற்குத் தயாராகும் போது, பங்கஜ் கூறினார், “நான் பந்துவீச்சு, பேட்டிங்  மற்றும் பீல்டிங்கில் நன்றாக என்னை தயார்ப்படுத்திக்கொண்டேன். நான் மான் சிங் ஜியையும் சந்தித்து அவரது அனுபவங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டேன், படப்பிடிப்பின்போது எனக்கு அது பேருதவியாக இருந்தது.

 

நன்றி: https://www.thebetterindia.comand Google

தமிழில்: காளிகபாலி    
 
குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.

1 comment:

  1. good information by author thank you
    message from kumar venkat chennai

    ReplyDelete