கபில்தேவின் கதை: 1983 இல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்ற இந்தியாவின் ஆல்-ரவுண்டர்
இந்தியா உருவாக்கிய மிகச்சிறந்த ஆல்-ரவுண்டர்களில் ஒருவரான கபில்தேவ், 24 வயதில் உலகக் கோப்பையை வென்ற இளைய கிரிக்கெட் அணித்தலைவர் என்ற சாதனையை இன்னும் வைத்திருக்கிறார். அவர் தனது பந்துவீச்சு திறமையால் கிரிக்கெட் ரசிகர்களை வசீகரித்தார்.
இந்தியாவின் புகழ்பெற்ற முதல் வேகப்பந்து வீச்சாளர் மற்றும் ஒப்பற்ற அணித்தலைவராக இருந்து, ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் போட்டியில் கபில்தேவ் தனது சிறப்பான பேட்டிங்கால் ஆட்டமிழக்காமல் 175 ஓட்டங்கள் எடுத்தது, இந்திய அணி உலகக் கோப்பை பட்டத்திற்கான பயணத்திற்கு அடித்தளம் அமைத்தது. அவர் அதை ‘வாழ்க்கையின் மறக்கமுடியாத இன்னிங்ஸ்’ என்று விவரிக்கிறார்.
சண்டிகரில் பிறந்த கபிலின் மிகப்பெரிய உந்துசக்தியாக இருந்தவர் அவரது தாயார். அவர் கபிலின் கிரிக்கெட் ஆர்வம் மற்றும் திறமையைக் கண்டறிந்து தனது அன்பு மகன் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவான் என்ற நம்பிக்கையில் கிரிக்கெட் பயிற்சிக்காக அனுப்பி வைத்தார். மேலும், கபிலின் வெற்றிக்கு எல்லாமுமாக இருந்தார்.
இங்கிலாந்தில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் உலகக் கோப்பையை, இரண்டு முறை சாம்பியனான மேற்கிந்தியத் தீவுகளைத் தோற்கடித்ததன் மூலம், 24 வயதான கபில் லட்சக்கணக்கான இந்தியர்களின் பேரன்பைப் பெற்று மனதில் இடம்பிடித்தார்.
இந்திய கிரிக்கெட்டின் தலைவிதியை மாற்றிய அணித்தலைவர் கபிலின் கதை இதோ:
நன்றி: https://www.thebetterindia.com
தமிழில்: காளிகபாலி
No comments:
Post a Comment