Wonderful Shopping@Amazon

Friday 3 January 2020

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-44

நினைத்ததை முடிப்பவன் (1975)

எம்ஜிஆர் - The Don of Tamil Cinema, பாடல்களில் பிடித்த ஒன்று. இதில் எம்ஜிஆரின் Energy வேற லெவல். திரை ஊடகத்தைச் சிறப்பாகப் பயன்படுத்தியவர் புரட்சித் தலைவர். தனி அமைப்பை உருவாக்கி விஸ்வரூபம் எடுப்பார் என்று கடைசி வரை யாராலும் கணிக்க முடியவில்லை. உற்று நோக்கினால் தனக்கான /அதற்கான கட்டமைப்பை மிக மிகப் பலமாக அமைத்துக்கொண்டார் என்றே சொல்வேன்.

சரி விசயத்துக்கு வருகிறேன், எம்ஜிஆரின் ஆஸ்தான இயக்குநர் ப.நீலகண்டன் இயக்கிய பதினாறாவது படம் "நினைத்ததை முடிப்பவன்" படத்தில் வரும் கவிஞர் மருதகாசி எழுதி, விச்சு டார்லிங் இசையமைத்த "கண்ணை நம்பாதே" பாடல், எம் ஜி ஆர் பிறந்தநாள், நினைவு நாள் அன்று, அலுவலகம் செல்கையில், ஊர் முழுதும் இந்தப் பாடல் ஒலிக்கும், கேட்கும் போதே உற்சாகமாக இருக்கும்.

இன்றைய தமிழ் சினிமா கதாநாயகர்கள் இப்படியான பாட்டைத் தனக்கு வைத்துக்கொள்ள முடியுமா என்பது சந்தகமே. இந்தப் படத்தில் "பூமழை தூவி வசந்தம்..."என்ற இன்னொரு அருமையான பாடலும் உண்டு.





நன்றி: Youtube


குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.




- காளிகபாலி     

No comments:

Post a Comment