Wonderful Shopping@Amazon

Friday 3 January 2020

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-42

ர் எஸ் மனோகர்

காலஞ்சென்ற நடிகர், 'நாடக காவலர்' என போற்றப்பட்ட ஆர் எஸ் மனோகர் - தமிழ் சினிமாவின் ஒப்பற்ற நடிகர். இவர் நடித்த வண்ணக்கிளி, கைதி கண்ணாயிரம், வல்லவனுக்கு வல்லவன், வல்லவன் ஒருவன், இரு வல்லவர்கள், நூற்றுக்கு நூறு, பில்லா, மற்றும் தீ   போன்ற படங்களைச் சென்னை தூர்தர்ஷனில் பார்த்திருக்கிறேன். தென்னகத்தின் 'ஜேம்ஸ் பாண்ட்' ஜெய்சங்கர் மற்றும் பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய வில்லன், வில்லனின் கையாள் என கர கர குரலில் மிரட்டலாகத் தனது நடிப்பை வழங்கியிருப்பார். சினிமாவில் வில்லன், நிஜத்தில் புராண மேடை நாடகம் மீது தீரா காதலும், அர்ப்பணிப்பும் கொண்ட கலைஞன். இவருடைய சம கால நடிகர்கள் பலர் மேடை நாடகத்தைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருந்தாலும். இவரின் 'நேஷனல் தியேட்டர்ஸ்'  நாடகக் குழு 'இலங்கேஸ்வரன்', 'சாணக்கிய சபதம்' , 'சூரபத்மன்', 'சிசுபாலன்', 'இந்திரஜித்', 'சுக்ராச்சாரியார்', 'நரகாசூரன்' மற்றும் 'திருநாவுக்கரசர்' போன்ற பிரமாண்ட அரங்க அமைப்புகள் கொண்ட மேடை நாடகங்களில், மந்திர-தந்திர காட்சிகள், போர்க்கள காட்சிகள் எனப் பல புதுமைகளைப் புகுத்தி ரசிகர்களை மகிழ்வித்தவர். ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடக்கும் நாடகத்தைப் பார்க்கக் கூட்டம் அலைமோதும், திரும்ப, திரும்பப் பார்த்து வியந்தவர்கள் உண்டு. சாணக்கிய சபதம் மற்றும் நரகாசுரன் நாடகங்களைச் சென்னை தூர்தர்ஷனில் அப்போது ஒளிபரப்பானது. இவர் கேரளாவிலோ, கர்நாடகாவிலோ அல்லது ஆந்திராவிலோ பிறந்திருந்தால் இவருக்குப் பல விருதுகளையும், அங்கீகாரத்தையும் கொடுத்துக் கௌரவித்திருப்பார்கள்.  இவர் மேடையில் நிகழ்த்திய மாயாஜாலத்தை இனியொருவர் நிகழ்த்துவது சாத்தியமில்லை. இதோ அவருடைய நாடகத்தின் சிறிய பகுதியினை கண்டுகளியுங்கள்:



நன்றி: Youtube


குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி     

No comments:

Post a Comment