Wonderful Shopping@Amazon

Wednesday 11 December 2019

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-39


சிந்து பைரவி(1985)

க்ஷன் பிளாக், வில்லன், வலிந்து திணிக்கப்பட்ட நகைச்சுவை பகுதி போன்ற விஷயங்கள் இல்லாமல் படமெடுக்க முடியுமா? முடியும் எனப் பல படங்களில் நிரூபித்தவர் தான் இயக்குநர் சிகரம் கே பாலச்சந்தர். 1985-ஆம் ஆண்டு இயக்குநர் சிகரம் கே பாலச்சந்தர் இயக்கி, தீபாவளி திருநாள் அன்று வெளியான "சிந்து பைரவி" படத்தில் மேற்சொன்ன எந்த விஷயமும் இல்லை.
இசைக்கலைஞனின் வாழ்வு தாழ்வு. ஜேகேபி என்ற இசைக்கலைஞனாக சிவகுமார் மிகச்சிறப்பாக நடித்திருப்பார்.
 
ஜேகேபி (சிவகுமார்), சிந்து (சுஹாசினி), பைரவி (சுலக்ஷனா) என மூன்று கதாபாத்திரங்களைச் சுற்றி நடக்கும் கதை. கேபி சார் படத்தில் துணை கதாபாத்திரங்கள் தான் கதையை நகர்த்தி செல்வார்கள், இதிலும் டில்லிகணேஷ், ஜனகராஜ் மற்றும் பலர் தங்கள் பங்கை சிறப்பாக செய்திருப்பார்கள். காட்சிக்குக் காட்சி சுவாரசியம் கலந்த Emotional Musical Drama. படமும், பாடல்களும் மிகப்பெரிய வெற்றிபெற்றது. இசைஞானி இசை காவியமே படைத்திருப்பார். இசை படங்கள் இப்போது அரிதாகிவிட்டது. தூர்தர்ஷனில் கே எஸ் சித்ரா பாடிய "பாடறியேன்" பாடலை வெள்ளிக்கிழமை "ஒளியும் ஒலியும்" நிகழ்ச்சியில் அடிக்கடி ஒளிபரப்புவார்கள். ராஜாவுக்கு இப்படத்தின் சிறந்த இசையமைப்பிற்கான தேசிய விருது வழங்கப்பட்டது. படத்தின் இடம்பெற்ற ராகங்கள் அடிப்படையிலான பாடல்கள், கர்நாடக இசை விமர்சகர் சுப்புடு அவர்களால் பாராட்டப்பட்டது

"பூமாலை வாங்கி வந்தான்..." என்ற பாடலை இரவு தலையணியுடன் (Headphone) கேட்டுப்பாருங்கள். வயலின், வீணை, புல்லாங்குழல், என இசைக்கருவிகளின் சங்கமம், தாசேட்டனின் ஆலாபனை, உங்கள் காதுகளில் ரீங்காரமிடும். இப்போது அந்தப் பாடலை கேளுங்கள்:





நன்றி: Youtube


குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி          



No comments:

Post a Comment