சமீபத்தில் நாகேஷ் உற்சாகமாகப் பாடும் 'நண்பர்கள்' (1991.) படத்தில்
வரும் "இந்த காதல் உலகம் இருக்கும் வரை வாழும் தெய்வீகம்.." யுடியூப்பில்
கேட்டேன். நல்ல பாடல். 1991. ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் பார்த்த
படம். பெரிய எதிர்பார்ப்பில்லாமல் வந்து வெற்றிகரமாக ஓடிய படம்.
சென்னையில் ஜெயப்பிரதா, ராஜ் திரையரங்கில் நூறு நாட்களுக்கு மேல் ஓடிய
படம்.
நகைச்சுவை,
பாடல்கள் எனக் கலகலப்பாக நகரும் அதே பணக்கார வீட்டுப் பெண்ணை ஏழை பையன்
காதலிக்கும் (நேர்கோட்டில் பயணிக்கும்) கதை தான். முடிவில்
சுபம். மம்தா குல்கர்னி தமிழில் அறிமுகமான முதல் படம் (பிறகு இந்தியில்
புகழ் பெற்றார்). இதில் கதாநாயகனாக நடித்த நீரஜ், அடுத்து ஷோபா
இயக்கத்தில் "இன்னிசை மழை" என்ற படத்திலும் நடித்தார். அதற்குப் பிறகு
என்ன ஆனார் என்று தெரியவில்லை?
இதோ அந்த பாட்டு, கேட்டு மகிழுங்கள்!
குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.
- காளிகபாலி
No comments:
Post a Comment