Wonderful Shopping@Amazon

Tuesday 23 July 2019

காஞ்சி அத்தி வரதர் தரிசனம்


அனைத்து சாலைகளும் காஞ்சி நகரை நோக்கி..........

"அத்தி வரதர் தரிசனம் செய்தீர்களா?"
"எவ்வளவு நேரம் ஆயிற்று?"
"நீங்க எப்போ போறீங்க.."
"நான் இரண்டாவது நாளே போயிட்டு வந்துட்டேன்.."
"அத்தி வரதர் தரிசனம் செய்தோ.." - கொச்சியில் உள்ள அலுவலக ஊழியர் கேட்கும் கேள்வி.

இந்த வருடத்தின் பேசுபொருள்  அத்தி வரதர் தரிசனம் தான்.


குழுவாகச் செல்ல முயன்று யாரும் வராமல் போகவே, நானும் எனது குடும்ப உறுப்பினர்களும் வெள்ளிக்கிழமை இரவு வீட்டிலிருந்து கிளம்பினோம். காஞ்சிபுரத்தில் உள்ள எங்கள் உறவின்முறை திருமண மண்டபத்தில் தங்கினோம்.

அதிகாலை வெகு சீக்கிரம் எழுந்து கிளம்பி நான்கு மணிக்கு வரிசையில் நின்றோம். ஐந்து மணி வாக்கில் வரிசை மெல்ல நகர ஆரம்பித்தது, அதற்குள் மழை கொட்டி தீர்த்தது, மழையையும் பொருட்படுத்தாது மக்கள் வரிசை நகர்ந்தது. பொழுது விடிய ஆரம்பித்தது.

மாட வீதியில் உள்ள வரிசைக்குச் செல்ல காலை ஏழு மணி பிடித்தது. காரணமே இல்லாமல் ஒரு மணி நேரம் வரிசை நிறுத்தப்பட்டது. பிறகு மெல்ல, மெல்ல நகர்ந்து கோவில் கோபுரம் வழியாக உள்ளே நுழைந்தால்..உள்ளே இருபது சுற்று.. சற்று அதிர்ச்சி தான்... இருந்தாலும் ..வந்தாயிற்று.. வரதரை இன்னும் ஒரு மணி நேரத்தில் கண்டுவிடுவோம் என்ற நம்பிக்கை இருந்தது. கொண்டு சென்ற பிஸ்கட் பொட்டலங்கள் மற்றும் தண்ணீர் தீர்ந்தது.

தென்னிந்திய மாநிலத்தைச் சேர்ந்த மக்களும் எங்களுடன் வரிசையில் நிற்பதைப் பார்க்கமுடிந்தது.  முதியோர் மற்றும் கைக்குழந்தையுடன் வருபவர்களுக்குத் தனி வரிசை இருந்தது. போதிய அறிவிப்பு இல்லாததால், அவர்களும் பொது வரிசையில் நின்றார்கள்.

மீண்டும் ஒருமுறை வரிசை நிறுத்தப்பட்டது. அப்படி நகர்ந்து, நகர்ந்து ஒரு வழியாக 11.30.மணிக்குத் தரிசனம் முடிந்து வெளியே வந்தோம்.

அங்கிருந்து ஆட்டோ பிடித்துத் திருமண மண்டபம் வர ஆளுக்கு ரூபாய் ஐம்பது, நாங்கள் அரசு பேருந்தில் 10 ரூபாய் செலவில் வந்து சேர்ந்தோம்.

பசி, சோர்வு வேறு. அடக்கி வைத்திருந்த இயற்கை கடன்களை முடித்துவிட்டு, நேராக உணவருந்தச் சென்றோம்.

ஒருமணி நேரம் சிறு தூக்கம். மாலை 3.30. மணிக்கு அரக்கோணம் வழியாக வீடு வந்து சேர்ந்தோம்.

வரிசையில் பலமணி நேரம் நின்ற தாக்கம் இரண்டு நாள் வரை இருந்தது. நமக்கே இப்படி என்றால்.,. நம் பிள்ளைகளுக்கு?

1979. ஆண்டுச் சிறுவனான என்னைத் தரிசனத்திற்கு அழைத்துச் சென்றதாக அம்மா சொன்னாள்.  இப்போது நினைவு தெரிந்து இரண்டாவது முறை.

சரி அத்தி வரதர் தரிசனம் காண்பதற்கு வரும் மக்கள் ஏன் தள்ளு முள்ளிகளில் சிக்குகிறார்கள்?

மாவட்ட நிர்வாகம் போதிய வசதி செய்யவில்லை, இத்தியாதி இத்தியாதி பல காரணங்கள் சொன்னாலும். பின்னல் உளவியல் காரணமும் உண்டு.

நம் மக்கள் Emotion லாக Connect ஆகி விட்டார்கள். அடுத்தமுறை நாம் உயிரோடு இருப்போமோ இல்லையோ? நம் பிள்ளைகளுக்கு இவ்வாய்ப்பை வழங்கவேண்டும். வாய்ப்பை நழுவவிடக்கூடாது போன்ற மன அழுத்தங்களுக்கு ஆளானதால், மக்கள் பெருங்கூட்டமெனத் திரளுகிறார்கள். கூடவே சமூகவலைதங்களில் இது பற்றிய செய்திகள் ஒரு வருடம் முன்பே
வர ஆரம்பித்துவிட்டது.

ஒரு விஷயத்தை நாம் Emotion லாக அணுகும்போது இரண்டு விளைவுகள் ஏற்படும் ஓன்று வெற்றி அல்லது தாமத வெற்றி.

சாயனக் கோலத்தைக் கண்டது போலவே நின்ற கோலத்தையும்  காணவேண்டும் என்று மின்சாரம் (சம்சாரம்) வற்புறுத்துகிறாள். பார்ப்போம்...!

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.




- காளிகபாலி

No comments:

Post a Comment