Wonderful Shopping@Amazon

Tuesday 12 October 2021

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-110

பாடகி திருமதி வாணி ஜெயராம்


பாடகி திருமதி வாணி ஜெயராம் அம்மா - இந்தியத் திரையிசையில் மதிப்பு ஆளுமை. ஆனாலும் அப்படி திரையிசை என்று சுறுக்கிவிடவும் முடியாது. எண்ணற்ற பக்தி இசை களஞ்சியங்களைப் பாடி ரசிகர்களைப் பக்தி வெள்ளத்தில் மூழ்கடித்தவர். அதிகபட்சம் ஒன்பது இந்திய மொழிகளில் பக்தி மற்றும் திரையிசைப் பாடல்களைப் பாடி ஏகப்பட்ட விருதுகளைக் குவித்தவர். வாணி அம்மா பாடிய எத்தனையோ பாடல்கள் என்னைப் பெரிதும் ஈர்த்திருக்கிறது. இன்று இவர் போலத் தெளிவான மொழி உச்சரிப்பில், உச்சஸ்தாபியில் பாடும் தனித் தன்மை வாய்ந்த குரலுடைய பாடகிகள் உண்டா தெரியவில்லை. இவருடைய சிறப்பே பாடலுக்கு மெருகூட்டும் ஆலாபனை தான் என்பேன். அதற்கு எத்தகைய கர்நாடக சங்கீத பயிற்சியை விடாமல் மேற்கொண்டிருப்பார் என்று நினைத்துப் பாருங்கள்.

எண்பதுகளில் கல்யாண வீடுகளில் குழாய் ஒலிபெருக்கி பொருத்தி தெருவையே அலறவிடுவார்கள். "இளமை ஊஞ்சலாடுகிறது" படத்தில் ராஜா சார் இசையில்  "நீ கேட்டல் நான் மாட்டேன் என்றா  " என்ற வாணி ஜெயராம் ஹை-பிட்சில் பாடத் தொடங்கும் பாடலை கேட்கவே ரம்மியமாக இருக்கும். அப்போது தான் வாணி ஜெயராம் பாடல் எனக்கு அறிமுகமானது.

வாணி அம்மாவின் சில பாடல்களைக் கேட்கும்போது கஸல் பாடலை கேட்பது போல தோன்றும்.பங்கஜ் யூதாஸ், ஹரிஹரன் கஸல் பாடல்களைக் கேட்டிருக்கலாம். ஆனால் தமிழில் வாணி ஜெயராம் பாடிய "யாரது சொல்லாமல்" , "மேகமே மேகமே" போன்ற சில பாடல்களைக் கேட்கும்பொழுது கஸல் பாடல்கள் கேட்பது போலவே இருக்கும்.

அவ்வளவு மென்மையாக மனதை வருடும் பாடல்கள் என்னுடைய playlist-இல் உள்ளது.  அதில் முதலிடத்தில் என்னுடைய விருப்ப பாடல்.  கவிஞர் வாலி எழுதி, சங்கர் கணேஷ் இசையில் "நெஞ்சமெல்லாம் நீயே" படத்தில் இடம்பெற்ற "யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி" என்ற பாடல். இந்த பாடலை எப்படிக் கேட்கவேண்டும் தெரியுமா? மழைக் காலத்தில், பகல் பொழுதில், சிறந்த தலையணியுடன் கேட்டுப்பாருங்கள் ...அந்த ஆலாபனை தான் என்ன ...ப்பா .என்ன ஒரு பாடல்.

சில பாடல்களைக் கேட்கும்போது பழைய காலத்துக்குப் பின்னோக்கி நேர இயந்திரத்தில்  பயணிப்பது போல் உள்ளது. வாணி ஜெயராம் பாடிய எனக்குப் பிடித்த சில பாடல்கள் "மல்லிகை உன்", "என் கல்யாண ", " நீ கேட்டால் நான் "
"யாரது சொல்லாமல்" , " மேகமே மேகமே ", "ஏழு ஸ்வரங்களில் எதனை", இன்னும், இன்னும் எத்தனையோ பாடல்கள்.

என் அம்மாவுக்கு வாணி ஜெயராமன் அவர்கள் பக்தி பாடல்கள் நிரம்பப் பிடிக்கும். விசேஷ நாட்களில் டேப் ரிக்கார்டரில் வாணி ஜெயராம் பாடிய பக்தி பாடல்கள் கேசட் போட்டு ஒலிக்கவிடுவார்.
 
இதோ இந்த இனிய பாடலை கேட்டு மகிழுங்கள் :
 


நன்றி: Google & YouTube

 குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.


காளிகபாலி 
 

1 comment:

  1. vani jayaram and p suseela are two female playback singers with melodious voice. Vani jayaram has good carnatic music knowledge. Thanks to illayaraja sir most of his songs are based on one or other carnatic raga. Vani brings the jeeva swara of the raga in her raga. like the author i too like the song megamae megame. The author has collected much information about vani and given in detail. Thank you.
    message from kumar venkataraman chennai

    ReplyDelete