Wonderful Shopping@Amazon

Sunday 10 October 2021

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-109

தேசிங்கு ராஜேந்தர்

தேசிங்கு ராஜேந்தர் என்கிற அஷ்டாவதானி டி ராஜேந்தர். தமிழ் சினிமா தவிர்க்க முடியாத ஆளுமை. மயிலாடுதுறை தந்த மாமணி. விவிதபாரதி வர்த்தக ஒளிபரப்பு வானொலி நிகழ்ச்சியில் அவருடைய பேச்சை கேட்டிருக்கிறேன். அனேமாக இவர் தான் வானொலியில் பேசிய முதல் நடிகர் என்று நினைக்கிறன். என் மாமா இவருடைய தீவிர ரசிகர், அதாவது, அவர் ஆரம்பித்த கட்சியில் சேருமளவுக்கு. "மைதிலி என்னை காதலி" படம் வந்த புதிதில், அதன் பாடல்கள் அடங்கிய காஸெட் தேயும் வரை கேட்டு ரசித்தவர். "ஒரு தாயின் சபதம்" படம் வெளியான அன்று தொடர்ந்து மூன்று காட்சிகள் பார்த்தவர். டி ராஜேந்தர் நடித்த எல்லா படங்களையும் வரிசையாக மனப்பாடம் செய்து வைத்திருப்பார்.

இயக்குனர் விசு படங்களுக்கு பிறகு பெண்களை அதிகளவில் திரையரங்கை நோக்கி படையெடுத்தது டிஆர் படங்களை பார்க்க தான்.

1987-ஆண்டு தமிழ் புத்தாண்டு அன்று வெளியான "ஒரு தாயின் சபதம்" சென்சேஷனல் ஹிட்.  மாமாவுடன் சென்று திரையரங்கில் நான் பார்த்த முதல்
டிஆர் படம். அதிகப் படங்களில் நடித்து பேர் வாங்க வேண்டும், பணம் சம்பாதிக்கவேண்டும் என்று இன்றுள்ள நடிகர்கள் போலில்லை, வருஷம் ஒன்றிண்டு படம். படம் /பாடல்கள் அமோக வெற்றி அவ்வளவு தான் இது தான்  டிஆர் கொள்கை. 

அவருடைய இயல்பான நடிப்பை மறைந்த இயக்குனர் கே வி அனந்த இயக்கிய "கவண்" படத்தில் பார்த்து ஆச்சர்யப்பட்டேன். எனக்கென்னவோ டி ராஜேந்தர் வெளிப்படங்களில் அதிகம் நடித்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. மேலும், இசை அவருக்கு வசப்பட்ட விஷயம், ஒரு வேளை அதில் மட்டுமே இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் ரசிகர்களுக்கு அதிக பாடல்கள் கிடைத்திருக்கும். அவருக்கு எல்லாத் துறைகளிலும் வல்லவர் என்று பெயரெடுக்க ஆசை போலும்.

அரசியலிலும் ஒரு கை பார்த்தவர் தான் நம்ம டிஆர்.  சென்னை பூங்கா நகர் சட்டமன்ற தொகுதியில் வெற்றிபெற்று பாரிமுனை பேருந்து நிலையத்தை சீரமைத்து அவருடைய சாதனைகளில் ஒன்று.

அவர் எடுத்த படங்களை பற்றி பேசுவதை காட்டிலும், படத்தில் இடம்பெற்ற பிரமாண்ட அரங்கமைப்பு நம்மை வியப்பில் ஆழ்த்தும். "ஒரு தாயின் சபதம்" படத்தில் இடம்பெறும் அந்த கோவில் அரங்கம். என்ன பாட்டென்று தெரியவில்லை இரண்டு வளையல் கைகள் அதன் மீது நாயகன் நாயகி பாடி ஆடுவார்கள்.

டிஆர் தன்னுடன் நடிக்கும் சக குணச்சித்திர நடிகர் /நடிகைகளுக்கு தொடர்ந்து வாய்ப்பளிப்பார். இது இயக்குனர் பாக்யராஜ் அவர்கள் பாணி.

டிஆர் அவர்கள் எண்பதுகளின் கடைசியில் மிகுந்த பொருட்செலவில், பிரமாண்டமாக "வில்-பவர்" என்ற பெயரில் ஆங்கிலம் அல்லது பான் இந்திய மொழிகளில் படம் எடுக்கப் பூர்வாங்க வேலைகளைத் தொடங்கினார், அதன் பிறகு அதைக் கிடப்பில் போட்டுவிட்டார் என்று "தினத்தந்தி" செய்தித்தாளில் படித்ததாக ஞாபகம்.

டிஆர் இசையமைத்த  எத்தனையோ சிறந்த பாடல்களில் இரண்டு பாடல்கள் எனக்கு பிடிக்கும் ஒன்று : "சலங்கை இட்டால் ஒரு மாது..."(படம் :மைதிலி என்னை காதலி)..", இரண்டு : "கூடையிலே கருவாடு.." (படம்: ஒரு தலை ராகம்).



நன்றி: Google & YouTube

 குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.


காளிகபாலி


2 comments:

  1. good article by author on T.Rajendar

    ReplyDelete
  2. good article by author on T.Rajendar comments from kumar venkataraman from chennai

    ReplyDelete