Wonderful Shopping@Amazon

Wednesday 27 February 2019

எம்ஜிஆர் பாடல்கள்


எம்ஜிஆர் பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் காரணம் நான் எம்ஜிஆர் பாடல்களை கேட்டு வளர்ந்த கடைசி தலைமுறையைச் சேர்ந்தவன்.

எம்ஜிஆர் நினைவு நாள் மற்றும் எம்ஜிஆர் பிறந்தநாள் அன்று அலுவலகம் செல்லும்போது ஊர் முழுவதும் அவர் பாடல்களை ஒலிபெருக்கியில் தெறிக்க விடுகிறார்கள் கழக கண்மணிகள்.

அமெரிக்கர்களின் வளர்ச்சிக்கு எப்படி சுயமுன்னேற்ற நூல்கள் உதவியாக இருந்தனவோ அதுபோல் முந்தய தலைமுறை தமிழர்களுக்கு எம்ஜிஆர் பாடல்கள் சுயமுன்னேற்ற ஊக்கியாக அமைந்தன.  தான் சார்ந்த திராவிட கொள்கைகளை தனது பாடல்கள் மூலம் தமிழகம் முழுதும் பட்டிதொட்டி எங்கும் ஒலிக்க செய்தார்அதன் மூலம் நிறைய இளைஞர்கள் வந்தார்கள், வளர்ந்தார்கள், வென்றார்கள்.  அவருடைய சினிமா பாடல்களே சொந்தக்கட்சி பிரச்சார பாடல்களாக அமைந்தது தான் சிறப்பு.



"உன்னையறிந்தால்.."
"நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற.."
"என்னை தெரியுமா.." 
"நான் ஆணையிட்டால்..."
"மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்..." 
"கண்ணை நம்பாதே.."
"எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே.."
“கண்போன போக்கிலே கால் போகலாமா”
“நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி”
"திருடாதே பாப்பா திருடாதே..."
இது போல ஏராளமான பாடல்கள்.  பாடல்களை பாடியது என்னவோ டிஎம்எஸ் அல்லது சீர்காழி கோவிந்தராஜன் அவர்களாக இருந்தாலும் எம்ஜிஆர் முகம் தான் நமக்கு ஞாபகம் வரும். அது தான் 3D எபெக்ட்.

இந்தியாவின் எந்த மாநிலத்திலும், எந்த நடிகரும் நிகழ்த்தாத சாதனை எதுவெனில் எம்ஜிஆர் தன் சினிமா பாடல்கள் மூலம் (திராவிட) கொள்கைகளை மக்கள் மனதில் பதிய செய்து அதன் மூலம் ஆட்சியை பிடித்தது.

ஆனால் இன்று அவருடைய சொந்த கட்சியே அவருடைய கொள்கைகளை பின்பற்றுகிறதா என்று தெரியவில்லை?

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.

- காளிகபாலி

1 comment:

  1. எல்லாம் ஓகே தான், ஆனா சீர்காழி கோவிந்தராஜன் பாடினாருன்னு சொன்னத தான் ஏத்துக்க முடியலை. டிஎம் செளந்தரராஜன் தான் அவருக்கும் சிவாஜிக்கும் அதிகமாக பாடினது.

    ReplyDelete