Wonderful Shopping@Amazon

Showing posts with label #முக்தா சீனிவாசன் #தெரியாதோ நோக்கு #சூர்யகாந்தி #பரமசிவன் கழுத்தில். Show all posts
Showing posts with label #முக்தா சீனிவாசன் #தெரியாதோ நோக்கு #சூர்யகாந்தி #பரமசிவன் கழுத்தில். Show all posts

Wednesday, 22 December 2021

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-118

சூர்யகாந்தி (1973)
 
ஜெயலலிதா அவர்கள் எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும் அரசியல் பிரவேத்துக்கு முன் அவர் நடித்த படங்களில் என் அம்மாவுக்கு பிடித்த படம் முக்தா சீனிவாசன் இயக்கி 1973-ஆம் ஆண்டு வெளிவந்த "சூர்யகாந்தி". கணவன்-மனைவி அவர்களுக்குள் நடக்கும் ஈகோ யுத்தம் தான் கதை. படம் முழுக்க அமைதியாக தனது தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் ஜெ.அவர்கள். மேலும் முத்துராமன், சாவித்திரி, மேஜர் சுந்தர்ராஜன். சோ. ராமசாமி, மௌலி, சிஐடி சகுந்தலா மற்றும் மனோரமா ஆகியோர் படத்தின் கதையோட்டத்துக்கு வலுசேர்த்திருப்பார்கள்.

மனோரமா அவர்கள் பாடிய "தெரியாதோ நோக்கு" பாடல் எனக்கு பிடிக்கும். மேலும் "ஓ மேரி தில்ரூபா" கண்ணதாசன் திரையில் தோன்றி பாடிய "பரமசிவன் கழுத்தில்" பாடல் யாருக்கு தான் பிடிக்காது. பாடும் நிலா பாலு தனது இளங்குரலில் ஜெ.-உடன் பாடிய "நான் என்றல் அது அவளும்" என மெல்லிசை மன்னர் இசையமைத்த அத்தனை பாடல்களும் இனிமையோ, இனிமை. இந்தப் படத்தில் கமல்ஹாசன் தங்கப்பன் மாஸ்டரிடம் நடன உதவியாளராகப் பணிபுரிந்தார். சரியாக 14 வருடங்கள் கழித்து முக்தா சீனிவாசன் தயாரிப்பில் கதாநாயகனாக நடித்த "நாயகன்" படம் வெளிவந்து பெரும் வெற்றிபெற்று கல்ட் கிளாசிக் அந்தஸ்தை அடைந்தது.

"சூர்யகாந்தி" படம் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு 16 செப்டம்பர் 2016 அன்று மீண்டும் வெளியிடப்பட்டது. இப்படம் மலையாளத்தில் "ப்ரியம்வதா" என்றும், தெலுங்கில் "மொகுடா பெல்லமா" என்றும், கன்னடத்தில் "ஹென்னு சம்சாரதா கண்ணு" என்றும் ரீமேக் செய்யப்பட்டது.



- காளிகபாலி    

நன்றி: https://www.youtube.com/ 

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.