Wonderful Shopping@Amazon

Thursday 30 September 2021

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-107

"ஸ்ரீ ராகவேந்திரர் (1985)"

பொதுவாக நடிகர்களுக்கு நூறாவது படம் வெற்றிப் படமாக அமைந்தது இல்லை. வெகு சிலருக்கே அந்த அதிர்ஷ்டம் வாய்த்தது.  (விஜயகாந்த்: கேப்டன் பிரபாகரன்). Angry Young Man கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்த ரஜினி, தனது நூறாவது படத்தை மாறுபட்ட கோணத்தில் கொடுக்க நினைத்தார். அதுவே தனது குருநாதர் தயாரிப்பில், தனது ஆதர்ச இயக்குநர் திரு எஸ் பி முத்தாரம்மன் இயக்கத்தில் "ஸ்ரீ ராகவேந்திரர்" வாழ்க்கை சரிதையில் நடித்துக் கொடுத்தார். படத்தில் குறையொன்றும் இல்லை. இப்போதும் பார்க்கலாம். அந்த நேரத்தில் அவருடைய ரசிகர்களுக்குப் பிடிக்கவில்லை.

இயக்குநர் இமயம் தயாரிப்பில் ராஜா அவர்கள் கர்நாடக இசையில் இசையமைத்த நான்காவது படம். கர்நாடக இசையில் அமைந்த பாடல்கள் பற்றிச் சொல்லவா வேண்டும். தேனினும் இனியப்பாடல்கள் இப்படத்திற்கு அமைந்தது.

மாயாமாளவகௌளை ராகத்தின்மேல் ராஜாவுக்கு அப்படி என்ன தீரா காதலோ தெரியவில்லை, "காதல் கவிதைகள்" (கோபுர வாசலிலே), "குயில புடுச்சி" (சின்ன தம்பி) "மதுர மரிக்கொழுந்து" (எங்க ஊரு பாட்டுக்காரன்) இன்னும் இன்னும் ஏராளமான பாடங்களை இந்த ராகத்தில் ரசிகர்களுக்குத் தந்திருக்கிறார். இந்த படத்திலும் கவிஞர் வாலி அவர்கள் இயற்றிய தாசேட்டன் பாடிய "ராம நாமம் ஒரு வேதமே" என்ற பாடல் மாயாமாளவகௌளை ராகத்தில் அமைந்த பாடல். நான் தினமும் காலை வேளையில் பக்தி பாடல்களுடன் சேர்ந்து கேட்கும் பாடல் இது. இராமாயண காவியத்தை ஒரு பத்தியில் இந்த பாடலில் சொல்லியிருப்பார். கவிஞர் வாலி அவர்கள் விகடன் வார இதழில் இராமகாதையைப் புதுக்கவிதையாக "அவதார புருஷன்" என்ற பெயரில் எழுதுவதற்கு இந்த பாடல் தூண்டுதலாக அமைந்திருக்கலாம் என்று நினைக்கிறன.

இந்த அந்த பாடலை கேட்டு மகிழுங்கள்:



 

நன்றி: Google


 குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.


காளிகபாலி 

 



1 comment:

  1. very good writeup comments from kumar venkataraman

    ReplyDelete