Wonderful Shopping@Amazon

Wednesday 17 January 2018

மூன்று பல்புகள்


இப்போதெல்லாம் திரையரங்கில் படம் பார்ப்பது பிடிக்கிறது. சமீபத்தில் பார்த்த மூன்று படங்கள்.

வேலைக்காரன் : 'தனிஒருவன்' போல அல்லது சேரி வாழ் மக்கள் சிரமங்களை சொல்லும் ஒரு பொலிடிகல் திரில்லராக இருக்கும் என்று போனால் உணவு கலப்படம், அது இது என்று எங்கெங்கோ கொண்டு போய் கடைசியில் கம்யூனிசம் போதிக்கிறார் இயக்குனர் மோகன் ராஜா.

அஞ்ஞாதவாசி: திருவிக்ரம் ஸ்டைலிஷ் இயக்குனர், அவருடைய படங்களில் வசங்கள் தெறிக்கும். ஆக்ஷன் பிளாக் பிரமாதமாக இருக்கும்.

திருவிக்ரம், பவன் கல்யாண்  இதற்கு முன்பு ஜல்ஸா, அத்தரின்டிக்கி தாரேடி போன்ற படங்களில் இணைந்திருக்கிறார்கள். அதனால் அஞ்ஞாதவாசி படத்துக்கு எதிர்பார்ப்பு கூடியது. தமிழ் படத்துக்கு இணையாக சென்னை மற்றும் புறநகர் புகுதிகளில் உள்ள  திரையரங்கில் அஞ்ஞாதவாசி திரையிடப்பட்டது.  பவன் கல்யாணுக்கு சென்னையிலும் ரசிகர் கூட்டம் உள்ளது போலும். எனக்கும் அந்த எதிர்பார்ப்பு இருந்தது அத்தரின்டிக்கி தாரேடி போல ஒரு முழுநீள ஆக்ஷன் + குடும்ப சென்டிமென்ட் படமாக இருக்கும் என்று போனேன்.

அத்தரின்டிக்கி தாரேடி எனக்கும் என் பசங்களுக்கும் பிடித்த படம். மா தெலுங்கு தொலைக்காட்சியில் எப்போது போட்டாலும் பார்ப்போம். முதல் ரீல் முதல் கடைசி ரீல் வரை விறுவிறு திரைக்கதை அமைத்திருப்பார் திருவிக்ரம். உயிரோட்டமான தேவி ஸ்ரீ பிரசாத்தின் பின்னணி இசை மற்றும் இனிய பாடல்கள்.

அத்தரின்டிக்கி மற்றும் அஞ்ஞாதவாசி ஏறக்குறைய ஒரே கதை போல இருக்கிறது. அதில் ஆரம்பத்தில் எம்.எஸ் அம்மா பாடல் ஒலிக்கும் இதில் டி,கே பட்டம்மாள் பாடல்.

அதில் கதாநாயகன் வீட்டு பெயர் - 'நந்தா' இதில் 'விந்தா'.
அதில் போமன் இரானி தாத்தா இதில் அப்பா.
அதில் கதாநாயகன் 'கார் ஓட்டுநர்' இதில் 'அந்தரங்க உதவியாளர்'
அதில் நதியா அத்தை இதில் குஷ்பு வளர்ப்பு அம்மா.
இரண்டிலுமே கதாநாயகன் தன்னுடைய இருப்பை மறைத்து வாழ்வான்.

அத்தரின்டிக்கியில் நகைசுவை அபாரம் அஞ்ஞாதவாசியில் நகைசுவை பகுதி குறைவு. ஆக்ஷன் கோரியோக்ராபி இரண்டிலுமே அருமை. அதுமட்டும் போதுமா,,...!

பச்.. இந்தமுறை திருவிக்ரம் மாஜிக் மிஸ்ஸிங்.

ஸ்கெட்ச்: ஸ்கெட்ச் டிரெய்லர் நன்றாக இருந்ததால், சரி விக்ரம் எதிரிகளை ஸ்கெட்ச் தூங்குவார் போல என்று நினைத்து போனால், இங்கே தவணை நிலுவை கட்டாத வண்டியை தூக்குகிறார். நிச்சயமாக விக்ரமுக்கு ஏற்ற கதை இதுவல்ல. விக்ரம் என்ற ஆளுமையை இயக்குனர் சரியாக பயன்படுத்தவில்லை என்று நினைக்கிறன்.
சரி மேலும் எதற்கு பல்பு வாங்கவேண்டும் என்று மற்றைய இரண்டு படத்துக்கு போகாமல் தவிர்த்து விட்டேன்.

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.

- காளிகபாலி
 

No comments:

Post a Comment