Wonderful Shopping@Amazon

Monday 29 June 2020

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-60

127 ஆண்டுகள்


ஊரடங்கு தொடங்கும் முன்பு மயிலாடுதுறை வழியாகக் கும்பகோணம் சென்று வந்தேன்.

பாரத மாதாவின் தவப்புதல்வன் சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் சொற்பொழிவாற்றிவிட்டு ராமேஸ்வரம் வழியாக சென்னைக்குத் திரும்புகையில் நள்ளிரவில் மயிலாடுதுறை ரயில் நிலைய சந்திப்பில் அவரை வரவேற்றதன் நினைவாக மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் கீழ்க்கண்ட நினைவுச் சின்னத்தைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது.
எங்கள் அலுவலகத்தில் அனைவருக்கும் யோகா பயிற்சி ஒரு தனியார் அமைப்பால் அளிக்கப்பட்டது. நானும் தினமும் செய்து வருகிறேன். பெரும்பாலான யோகா உடற் பயிற்சிகள் விவேகானந்தா யோகா மையம் அடியொற்றியே இருந்தது.

1893-ஆம் ஆண்டுச் செப்டம்பர் பதினோராம் நாள் அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் மதங்களுக்கான உலக நாடாளுமன்றத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க சுவாமி விவேகானந்தர் ஆற்றிய சொற்பொழிவு உரையைச் சமீபத்தில் கேட்க நேர்ந்தது."அமெரிக்க நாட்டின் சகோதரிகளே, சகோதரர்களே" எனும் தொடக்கத்திற்கு இரண்டு நிமிட இடைவிடாத கைதட்டலால் அரங்கமே அதிர்ந்தது. நல்ல கம்பீரமான குரல். குரல் பதிவு முப்பது நிமிடங்கள் வரை நீடித்தது. ஆனால் உண்மை யாதெனில் அன்றைய காலகட்டத்தில் சொற்பொழிவைப் பதிவு செய்யும் எந்தத் தொழினுட்ப வசதியும் இல்லை. அதனால் அது சுவாமி விவேகானந்தரின் குரலும் அல்ல என்று தெரிந்தது. தகவல் களஞ்சியமாம் இணையத்தில் இது போன்ற போலி பதிவுகளும் /தகவல்களும் உலா வருகிறது

சரி அவரின் பேச்சின் சாராம்சம் தெரியவேண்டுமா? இந்தச் சுட்டியை அழுத்தித் தெரிந்துகொள்ளுங்கள்.



நன்றி: bbc.com


குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.


- காளிகபாலி     




2 comments:

  1. A" Arise stop not,
    Till the GOAL is reached"

    Can't understand why all true prodigies like him, Ramanujum, Bharathiyar has to go at young age.
    But there outputs are huge that keep changing world

    ReplyDelete
  2. Swami Vivekananda a Great Personality who introduced key philosophies of Vedanta and Yoga to the western world.
    Good article by author in remembrance of swami vivekananda

    ReplyDelete