Wonderful Shopping@Amazon

Wednesday 1 July 2020

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-62


அண்ணா - ‘மாபெரும் தமிழ்க் கனவு


ந்தியத் துணைக் கண்டத்தில் தோன்றிய பன்முக ஆற்றல் கொண்ட தலைவர்களில் ஒருவர் பேரறிஞர் அண்ணா. இலக்கியம், நாடகம், திரைப்படம், உரைநடை எழுத்து, சட்டமன்றம், நாடாளுமன்றம் என அவர் கால்பதித்த தடமெல்லாம் வெற்றியே. இவர் போல் புதிய சிந்தனையுடைய தலைவர் இனி ஒருவர் பிறக்கப்போவதும்மில்லை.

ஏற்கனவே திரு என் சொக்கன் எழுதிய 'அண்ணாந்து பார்' என்ற புத்தகத்தை படித்துள்ளேன். சமீபத்தில் தி ஹிந்து தமிழ் திசை பதிப்பக வெளியீடான அண்ணா - 'மாபெரும் தமிழ் கனவு' என்ற புத்தகத்தை வாங்கிப் படித்தேன்.

நிலச்சுவான்தார்கள் மற்றும் மேட்டுக்குடி மக்களுக்குத் தான் அரசியல் என்றிருந்த நிலையை மா(ற்)றி சாமானியர்களுக்கும் அரசியலில் இடமுண்டு என்று வழிகாட்டியவர் அண்ணா. அவர் காலத்தில் நிறையப் படிப்பகம் உருவானது. மிதிவண்டி பழுது நீக்கும் நிலையம், தேநீர்க் கடை என அங்கெல்லாம் திராவிடச் சிற்றிதழ்கள் வாசிக்கக் கிடைத்தது. திராவிடக் கொள்கைகளை இளைஞர்கள் படித்து, தெளிந்து, தெரிந்துகொள்ள ஏதுவாகவிருந்தது.

மக்களின் பசிப்பிணியைப் போக்கிய வள்ளலார் அடியொற்றி ''ரூபாய்க்கு மூன்று படி அரிசி லட்சியம், ஒரு படி அரிசி நிச்சயம்'' என்ற அவருடைய அறிவிப்பு, அவர் வழி வந்த இன்றைய அரசுகளும் இந்தக் கொரோனா நோய்த் தொற்றிலும் விலையில்லா அரிசியாகத் தொடர்ந்து வழங்கி வருகிறது.

அண்ணாவின் மக்கள் மன்ற / நாடாளுமன்ற / சட்டமன்ற உரைகள், கடிதங்கள், கவிதைகள், கட்டுரைகள், சொற்பொழிவுகள், நாடகம், சிறுகதைகள், பேட்டிகள் என இன்றைய தலைமுறையினர் படித்து, தெரிந்து, தெளிந்து,பாதுகாக்க வேண்டிய அறியப் பொக்கிஷம் இப்புத்தகம்.

‘மாபெரும் தமிழ்க் கனவு’ புத்தகம் வாங்க இந்த இணைப்பைச் சொடுக்கவும்: https://www.kamadenu.in/publications

திரு சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் எல் ஆர் ஈஸ்வரி அவர்கள் பாடிய பேரறிஞர் அண்ணாவின் வாழ்க்கையை பாடலை கேட்டுமகிழுங்கள்:



 


நன்றி: The Hindu Tamil & Youtube


குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.




- காளிகபாலி     


2 comments:

  1. Arumaiyana pathivu

    ReplyDelete
  2. Good one Vijay, facts about Anna Durai and his achievement. Nice

    ReplyDelete