Wonderful Shopping@Amazon

Monday 24 December 2018

படி படி லேசெ மனசு(2018)

எத்தனையோ காதல் படங்கள் வந்திருக்கிறது, வந்துகொண்டிருக்கிறது. ஒவ்வொன்றும் ஒரு ரகம்.  குடும்பம், ஆக்ஷன், மற்றும் பேய் படங்கள் வந்து ஓய்ந்து பிறகு. மீண்டும் காதல் படங்கள் வந்து ரசிகனை  ஆசுவாசபடுத்தும்.  காதல் படங்களுக்கு என்றுமே மவுசு இருக்கத்தான் செய்கிறது.

இந்தாண்டின் இறுதியில் தெலுங்கில் வந்திருக்கும் Musical Romantic Comedy படம் படி படி லேசெ மனசு.

எந்த ஒரு நடிகரும் கொஞ்சநாள் தான் காதல் படங்கள் நடிக்கமுடியும். ஒவ்வொரு நடிகருக்கும் அவர்கள் திரை வாழ்வில் காதல் படங்கள் பெரு வெற்றியை தேடி தந்திருக்கும்.

சர்வானந்த் - தெலுங்கு திரையுலகில் ரன் ராஜா ரன், மல்லி மல்லி இதி ரன்னி ரோஜு,  எக்ஸ்பிரஸ் ராஜா, ராஜாதி ராஜா, ஷதமானம் பவதி, ராதா, மஹானுபாவுடு என வித்தியாசமான கதைகளில் நடித்து வெற்றிகளை குவித்துவரும் நடிகர்.  காமெடி, ஆக்ஷன் என மனிதர் கலந்து கட்டி நடிக்கிறார்.  100% பொழுபோக்கு அம்சங்கள் அவர் படங்களில் நிச்சயம் இருக்கும்.

பெரிய நடிகர் நடித்த படமும், சர்வானந்த் நடித்த 'ஷதமானம் பவதி' படமும் ஒரே நாளில் வெளியானது.  ஆனால் 'ஷதமானம் பவதி' படம் பெரிய நடிகரின் பட வசூலை பாதித்தது. குடும்ப மாண்புகளை சொன்ன 'ஷதமானம் பவதி' ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றது.

ஃபிடா, எம்சிஏ போன்ற படங்களில் நடித்த சாய் பல்லவிக்கு இது மூன்றாவது தெலுங்கு படம்.

சரி விஷயத்துக்கு வருகிறேன்..... 'படி படி லேசெ மனசு...' என்ன ஒரு அருமையான பெயர்.. 'விழுந்து விழுந்து எழும் மனசு..' என்று பொருள் கொள்ளலாம். சர்வானந்த் மற்றும் சாய் பல்லவி நடித்து வெளிவந்திருக்கும் படத்தை பற்றி பார்ப்போம்.

நாயகன் விழுந்து விழுந்து நாயகியை காதிலிக்கிறான் ஒரு பூகம்பம்  அவர்களை பிரிக்க, அவர்கள் மீண்டும் எப்படி ஒன்று ஒன்று சேர்கிறார்கள் என்பது மீதி கதை.  காதல், காதல், காதல், பிரேக்-அப் மீண்டும் காதல், காதல் சுபம்.

சர்வானந்த் (சூர்யா) - சாய் பல்லவி (வைஷு) ...ப்பா  என ஒரு கெமிஸ்ட்ரி. சாய் பல்லவி துரு துரு, கண்கள்........காதல், சோகம் என வாவ்சொல்ல வைக்கிறார்...
நாயகனுக்கு முத்தத்தை மொத்தமாக வரி வழங்குகிறார் நாயகி.

விஷால் சந்திரசேகரின் இசையில் "படி படி லேசெ மனசு", "கல்லோலம்",
"ஹ்ருதயம் ஜார்பி...", "ஏமை போயாவே..","ஓ மை லவ்லி.."  போன்ற பாடல்கள் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும்.  பின்னணி இசை சுமார்.

ஹௌரா பாலம், டம் டம் ரயில் நிலையம், ஹூக்லி படகு குழாம், கல்கத்தாவின் நெருக்கமான வீதிகள் என ஒளிப்பதிவாளர் ஜே கே வின் கேமரா நம்மை அழைத்து செல்கிறது.

சில படங்களில் துணை கதாபாத்திரங்கள் நமக்கு பிடிக்கும் காரணம் அவர்கள் இயல்பான நடிப்பு நம்மை.  இதில் சாய் பல்லவிக்கு அப்பாவாக வரும் முரளி சர்மா வெகு இயல்பாக நகைசுவை கலந்து நடித்திருகிறார். மெயின் வில்லன், போலீஸ் என கலக்கியவர் இப்பொது அப்பா வேடங்களில் முத்திரை பதித்து வருகிறார்.

சாய் பல்லவிக்கு தோழியாக வரும் நடிகை Cute..!

இயக்குனர் ஹனு ராகவபுடியின் நான்காவது படம்  படி படி லேசெ மனசு...! இடைவேளைக்கு பிறகு படம் கொஞ்சம் மெதுவாக நகர்கிறது மற்றபடி காதல் இசை பட ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் இந்த படம்.

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.

- காளிகபாலி

கே ஜி ஃஎப் - முதல் பாகம் (2018)


நவீன் குமார் கவுடா என்கிற நடிகர் யாஷ் அல்லது யஷ் - கன்னட திரையுலகின் வளர்ந்துவரும் சூப்பர் ஸ்டார். குறுகிய காலத்தில் பல வெற்றிப்படங்கள்.  அவருடைய சில படங்களை பார்த்திருக்கிறேன் அதில் கஜகேசரி, மாஸ்ட்டர்பீஸ், மிஸ்டர் & மிஸ்டர்ஸ் ராமச்சரி மற்றும் கூகுலி எனக்கு பிடித்த படங்கள்.  நல்ல உயரம்,  சமகால இளைஞர்களை பிரதிபலிக்கும் தோற்றம், மீசையுடன் சேர்ந்த அழகான குறுந்தாடி, ஆக்ரோஷம், நகைசுவை என கலந்து கட்டி மனிதர் ஜமாய்க்கிறார்.

கே ஜிஎப் நீண்ட காலமாக தயாரிப்பில் இருந்தாலும், கே ஜிஎப் டிரெய்லர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை  எகிற வைத்தது.  பெங்களுருவில் உள்ள என்னுடைய நண்பர் அவ்வப்போது படத்தை பற்றி  சொவதுண்டு. கண்டிப்பாக பார்க்கவேண்டியிருந்தார்.  தமிழிலும் வந்ததால் கிளம்பிவிட்டேன்.

கே ஜி எப் - Best of Neo-Noir Film in  Indian Cinema என்று சொல்வேன். கன்னட திரையுலகை திரும்பி பார்க்கவைக்கும் படைப்பு.  கோலார் தங்க வயலும் அதன் பின்னிலுள்ள ஒடுக்குமுறை, ரத்தக்கரை படிந்த அடிமை வரலாறு மற்றும் தங்க சாம்ராஜ்யத்தை கைப்பற்ற  நாயகன் நடத்தும் வேட்டை என எழுத்தாளர்  ஆனந்த் நாக் பார்வையில் விரிகிறது படம்.

நாயகன்  'ராக்கி' அறிமுகமாகும் அந்த முதல் சண்டை காட்சி அட்டகாசம். இதுபோல ஒரு அறிமுக காட்சி பார்த்து நீண்ட நாளாயிற்று.  இந்தாண்டின்
சிறந்த நாயகன் அறிமுக காட்சி.  நாயகன் யாஷ் தன்னுடைய அனாயசமாக  நடிப்பால் மிரட்டுகிறார்.  படத்தில் நாயகன் பயன்படுத்தும் பைக் வடிவமைப்பு அருமை.

இடைவேளைக்கு பிறகு வரும் தங்க வயல் காட்சிகள் நம்மை வாய் பிளக்க வைக்கிறது. ஒவ்வொரு காட்சியிலும் இயக்குனர் பிரசாந்த் நீல் மற்றும் கலை இயக்குனர் சிவகுமார் குழாம் உழைப்பு தெரிகிறது. கோலார் தங்க வயலை நாம் பார்த்தது இல்லை ஆனால் அது இப்படி தான் இருக்கும் என்று என்னுனமளவுக்கு தத்ரூபமாக படைத்திருக்கிறார் கலை இயக்குனர்.

கோலார் தங்க வயலில் நடக்கும் பைக் துறத்தல் மற்றும் சுரங்க அடியில் நடக்கும் சண்டைக்காட்சியை படமாக்கிய விதம் வாவ்!!

தமன்னா ஒரு  பாட்டுக்கு வந்து போகிறார். கதாநாயகி ஸ்ரீநிதி நாயகன் ராக்கி அறிமுகமாகும் பாடல் காட்சி அருமை. பின்னணி இசை காட்சிகளின் படத்தின் வீரியத்தன்மையை.  பாடல்கள் பெரிதாக மனதில் ஓட்டவில்லை.

படத்தில் வரும் எல்லா நடிகர்களும் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகம் இல்லை ஆதாலால் படத்தில் எளிதில் ஒன்றை முடிகிறது.  படத்தில் ஏகப்பட்ட வில்லன்கள். ஆனால் வில்லன்களுக்கெல்லாம் வில்லன் நம்முடைய நாயகன் ராக்கி.  கிளைமாக்ஸ் காட்சி திக் திக் நிமிடங்கள்.

இது பீரியட் சினிமா ரசிகர்களுக்கானது.  அகன்ற திரையில் கண்டு சுகானுபவம் பெறுக.

கே ஜி ஃஎப் - பாகம் இரண்டுக்காக காத்திருப்போம்......

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.

- காளிகபாலி

Saturday 15 December 2018

ஓடியன் - 2018


மோகன்லால் நடித்த எத்தனையோ படங்களை பார்த்திருக்கிறேன். அதில் என்னுடைய விருப்ப படங்கள்... ராவணபிரபு, கிலுக்கம், ஆறாம் தம்புரான், ஸ்படிகம், நரசிம்மம், சித்ரம், தேவாசுரம், கிரீடம், காலபாணி, என்னும் எப்போழும் மற்றும் தேன்மாவின் கொம்பத்து.

அவர் ஸ்டலிலிஷாக பேசும் வசனங்கள் எனக்கு பிடிக்கும்.

"சவாரி கிரி கிரி.........",  "நீ போ மோனே தினேஷா..........", "மீனுக்குட்டி...",  "முத்து காவு...",  "களி கனிமங்களத்தே தம்புரானோடு வேண்ட.."

2018 ன் மலையாள மொழியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய மோகன்லால் படம் "ஓடியன்". படத்தை பற்றிய செய்திகள் அவ்வப்போது படிக்க நேர்ந்தது.  சரி அப்படி என்னதான் இருக்கிறது, பார்ப்போமே என்று போனேன்.

வெளிநாட்டு பழங்குடிகள் பற்றிய சிறுகதைகளை படித்திருப்போம் / கேட்டிருப்போம். அக்கதைகளின் உள்ளடக்கம் தார்மீக அறம் பற்றி சொல்லப்பட்டிருக்கும். அறம் மீறி நடந்தால் அதற்கான விளைவுகளை சந்திக்கவேண்டிருக்கும் என்பது போல கதை இருக்கும்.

ஓடியன் படம் அதுபோல ஒரு கதை என்று தோன்றுகிறது. மெகா ஸ்டார் மம்முட்டி கதை சொல்ல விரிகிறது படம்.

நமது நாயகனும் தாத்தாவிடமிருந்து கற்றுக்கொண்ட 'சித்து' மற்றும் 'கட்டு' வேலைகளை நியாயமான காரணங்களுக்கு மட்டுமே பயன்படுத்துகிறான். இருந்தாலும் கொலை பழி நாயகன் மீது விழ, ஊரைவிட்டு தலைமறைவாகிறான்.

பதினைந்து வருடங்கள் கழித்து சொந்த ஊருக்கு திரும்பி வரும் தன் மீது விழுந்த பழியை எப்படி தீர்க்கிறான் என்பது மீதி கதை.

நாம் மோகன்லால் நடிப்பை எத்தனையோ படங்களில் பார்த்து  வியந்திருப்போம், இதிலும் அப்படியே. காசியில் அறிமுகமாகும் அந்த முதல் காட்சி அருமை. எப்போதும் முகத்தில் புன்னகையுடன் இளவயது மற்றும் முதிர்ச்சியான வயது என மாறுபட்ட கதாபாத்திரத்தை அழகாக செய்திருக்கிறார் Complete Actor மோகன்லால்.

பொதுநலன் கருதியோ என்னவோ 'சித்து' மற்றும் 'கட்டு' வேலைகளை பற்றிய டீடைலிங் இயக்குனர் சொல்லாமல் விட்டிருக்கலாம் என்று நினைக்கிறன்.

சண்டை இயக்குனர் பீட்டர் ஹெய்னின் உழைப்பு ஒவ்வொரு சண்டை காட்சிகளிலும் தெரிகிறது. அதற்கேற்றார்போல் லாலேட்டனின் எனர்ஜி லெவல் அசரடிக்கிறது.  அந்த கிளைமாக்ஸ் சண்டை காட்சி அருமை.

பிரகாஷ்ராஜ், மஞ்சுவாரியர், சனா அல்தாப், நரேன், இன்னோசென்ட், மனோஜ் ஜோஷி, சித்திக் மற்றும் நம்மூர் மொட்டை ராஜேந்திரன் (கிளைமாக்ஸ் சண்டை காட்சி) என அவரவர் தங்கள் கதாபாத்திரங்களை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.  சாம் சி எஸ் பின்னணி இசை அருமை.

கமர்சியல் பட ரசிகர்களுக்கு ஏற்ற படம் இதுவல்ல.

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.

- காளிகபாலி